tamilnadu

img

சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம் 

தேர்தல் கால வாக்குறுதிகளான சிறப்பு கால முறை ஊதியத்தை மாற்றி கால முறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க திருச்சி மாவட்டக் குழு சார்பில், வியாழனன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அமுதா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி வரவேற்றார். போராட்டத்தை மாநிலத் துணைத் தலைவர் பெரியசாமி துவக்கி வைத்தார். போராட்டத்தை விளக்கி சங்க மாவட்டச் செயலாளர் அல்போன்சா, மாவட்ட துணைத் தலைவர் சசிகலா, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி, வட்டத் தலைவர் சுரேஷ் பிரபு ஆகியோர் பேசினர். மாவட்ட துணைத் தலைவர் சந்திரா நன்றி கூறினார்.