“இந்தியா முழுவதும் நடைபெற்ற 13 சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, உத்தரகண்ட் மாநிலம், பத்ரிநாத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இது வடஇந்திய மக்கள் மத்தியில் பாஜகவுக்கு எதிரான மனநிலை உள்ளதை காட்டுகிறது” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.