tamilnadu

img

மலக்குழியில் இனி ஒருவர்கூட இறங்கக்கூடாது

திரைக்கலைஞர்  ரோகிணி பேச்சு புதுக்கோட்டை, பிப்.2-  மலக்குழியில் இனி ஒரு மனி தர்கூட இறங்கக்கூடாது என்ற நிலை யை உருவாக்க வேண்டும் என  திரைக்கலைஞர் ரோகிணி கூறினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் -கலைஞர்கள் சங்கத்தின் சார்  பில் ‘விட்னஸ்’ திரைப்படம் திரை யிடலும், அப்படத்தின் கலை ஞர்களுக்கு பாராட்டு விழாவும் புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.  இந்நிகழ்வில் திரைக்கலைஞர் ரோகிணி பேசுகையில், ‘‘சாக்கடை கள், குப்பைகளை அகற்றும் சக  மனிதர்களை நாம் சாதாரணமாக கடந்து செல்வது இந்த நூற்றாண் டின் அவலம். மலக்குழிக்குள் கூட  மனிதர்கள் இறங்குவது இன்னும் நின்றபாடில்லை. இந்த சமூக அவ லத்தை ‘விட்னஸ்’ திரைப்படம் கலைவடிவில் பேசியுள்ளது. இது போன்ற கொடுமைக்கு உள்ளாகி இறந்து போகும் துப்புரவுப் பணியா ளர்களின் மரணத்திற்கான நீதியின் குரலை எழுப்பி உள்ளது.

குற்றவாளி கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே இப்படத்தின் நோக்கம். துப்புரவுப் பணியாளர்களுக் கான பணி பாதுகாப்பு, ஊதியம் வழங்கப்படுவதில் உள்ள பிரச்சனை களை உடனடியாக களையப்படு வது ஒருபுறம் இருக்கட்டும். இனி ஒரு மனிதர் கூட மலக்குழியில் இறங்  கக்கூடாது என்பதே முக்கியம். அர சாங்கங்கள் உடனடியாக கழிவுநீர் தொட்டிகளுக்குள் சுத்தம் செய்யும்  கருவிகளை தருவிக்க வேண்டும்.  அதுவே சகமனிதன் மீதான அக்  கறையையும் பொறுப்புணர்வை யும் உறுதி செய்யும்’’ என்றார். தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலை வர் மதுக்கூர் ராமலிங்கம், சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, கவிஞர் எஸ்.கவிவர்மன், தமுஎகச  மாநில துணைத் தலைவர்கள் நா. முத்துநிலவன், ஆர்.நீலா, கவி ஞர்கள் தங்கம்மூர்த்தி, எஸ்.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்ற னர். முன்னதாக மாவட்டச் செயலா ளர் எம்.ஸ்டாலின் சரவணன் வர வேற்க, பொருளாளர் கி.ஜெய பாலன் நன்றி கூறினார்.

;