tamilnadu

img

பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திற்கு அனுமதியில்லை

சென்னை, ஏப்.18- கல்லூரிகளில் புதிய பாடத் திட்டம் தொடங்கும்போது ஏஐசிடிஇ மாநில அரசை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேர வையில்செவ்வாயன்று (ஏப்.18) கேள்வி நேரத்தில் பேசிய ஜி.கே.மணி,“சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய தொழில்நுட்ப பாடப்பிரிவு தொடங்கி இருப்பதாகவும் புதிய தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் தகவல் வந்துள்ளது.  அண்ணா பல்கலைக்கழகத்தில் அதே படிப்புக்கு ரூ.13,000 வசூலிக்கும் நிலையில் இதற்கு மட்டும் ஒன்றரை லட்சம் ரூபாய் வசூலிக்க இருப்பதாகவும் இந்தப் பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்வதால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு கிடைக்காது என்றும் சொல்லப்படுகிறது. அந்த பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இது அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா? என்றார். இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, “பி.டெக், எம்.டெக் போன்ற படிப்புகள் தொடங்கு வதற்கு அனுமதி அளிக்கக்கூடிய உரிமை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தான் இருக்கிறது. நெல்லை பல்கலையில் இருந்த எம்.டெக் படிப்பு நிறுத்தப்பட்டது. மேலும், சேலம் பல்கலைக்கழகத்தில் எம்டெக் நடை பெற்றது. தற்போது நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு பி.டெக் படிப்பை துவங்குவதற்கு ஒரு தனியார் கல்லூரியில்  இருந்து விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது அரசின் கவனத்திற்கு வரவில்லை. இதுகுறித்து துணைவேந்தரிடம் பேசியுள்ளேன். ஏஐசிடிஇ அனுமதி கொடுத்ததாக தெரிவித்திருக்கிறார். இது  போன்று மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் ஏஐசிடிஇஅனுமதி கொடுக்கக்  கூடாது. இதுபோன்ற படிப்புக்கான அனுமதி கொடுத்திருந் தால் அதை நிறுத்த சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.