வெம்பக்கோட்டை, மே 13- விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் கண்டெடுக்கப் பட்டுள்ள தொல்லியல் பொருட்க ளின் கண்காட்சியை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தி ரன், தங்கம் தென்னரசு ஆகியோர் சனிக்கிழமை துவக்கி வைத்தனர். வெம்பக்கோட்டை வைப்பாற் றின் வடக்குக் கரையோரத்தில் கடந் தாண்டு முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற முத லாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தங்க அணிகலன், திமிலுடன் கூடிய காளை உருவம், சுடு களிமண் ணால் ஆன அழகிய வேலைப்பாடுக ளுடன் கூடிய குடுவை, யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கழுத் தில் அணியப்படும் பதக்கம், பெண் சிற்பங்கள், சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணி கலன், சுடுமண்ணாலான தொங் கட்டான், பகடைக்காய்,செப்பு நாண யம் உள்ளிட்ட 3,254 பழங்காலப் பொருட்கள் கண்டு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
அகழாய்வில் கண்டெடுக் கப்பட்ட தொன்மையான பொருட் களை காட்சிப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதைத் தொடர்ந்து அக ழாய்வு நடக்கும் பகுதியில் தொல்லி யல் பொருட்களின் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கண்காட்சியை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சனிக் கிழமையன்று திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். கண்காட்சியில் முதலாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 3254 தொன்மையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலை யில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தொல்லியல் பொருட்க ளை பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதம் நடைபெறும் இக்கண்காட்சியை பொதுமக்கள் பார்க்க எதுவாக சிறப்புப் பேருந்து இயக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார். நிதி மற்றும் மனிதவள மேலாண் மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது :
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொன்மையான மனி தர்கள் ஏனோதானோ என வாழ வில்லை. நவநாகரீக வாழ்க்கை முறையில் வாழ்ந்துள்ளனர். தொழில் செய்துள்ளனர், பல பொ ருட்களை அவர்களே உருவாக்கி யுள்ளனர். கடல்வழியாக வாணி பம் செய்துள்ளனர், கடல் சங்கில் அணிகலங்களை உருவாக்கி யுள்ளனர். வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் வாணிபம் செய்த தற்கான சான்றுகள் கிடைத்துள் ளன. உலகளவில் சிறப்புப் பெற்றுள்ள கீழடி அகழாய்விற்கு சற்றும் குறையாத முக்கியத்துவம் வாய்ந்ததாக வெம்பக்கோட்டை அகழாய்வு திகழ்கிறது. கற்களை வைத்து தொழில் செய்த காலத் திற்கும் இரும்பை வைத்து தொழில் செய்ததற்குமான இடைப்பட்ட காலத்தில் எந்தப் பொருட்களை வைத்து தொழில் செய்துள்ளார்கள் என்பதற்கான சான்றுகள் இங்கு கிடைத்து வருகின்றன. கற்காலத்திற்கும், நுண் கற்காலத்திற்கும், இரும்பு காலத்திற் கும் இடையேயான தொடர்பை விளக்கும் வகையில் வெம்பக் கோட்டை அகழாய்வு அமைந்துள்ள தால் உலகளாவிய அளவில் முக்கி யத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்றார்.
-நமது நிருபர்