புதுதில்லி,பிப்.11- மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் ஆடசியில்தான் பெட்ரோல், டீசல்,எரிவாயு விலைகள் தொடர்ச்சி யாக ஏற்றப்பட்டன. இதனால் அத்தியா வசியப்பொருள்களின் விலைகளும் உயர்ந்தன. இந்த விலை உயர்வால் சொல்லொண்ணா துன்ப துயரங்களை அனுபவித்து வருவதாக மக்கள் கொந்த ளிப்பு கூறுகின்றனர். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் ஏழை எளிய நடுத்தர மக்களுக்காக எதுவும் இல்லை என்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே பெரும் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ள தாகவும் மக்கள் கோபத்துடன் தெரி விக்கின்றனர். இந்நிலையில் நாடாளு மன்றத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலைவாசி உயர்வை கட்டுப் படுத்தியுள்ளதாக அளந்துவிட்டுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசுகையில், கிரிப்டோ கரன்சி பரிமாற்றத்திற்கு வரி விதிப்பது அதை அங்கீ கரிப்பதற்கு அர்த்தமாகாது; வரி விதிப்பது அரசின் உரிமை. கிரிப்டோ கரன்சிக்கு தடை விதிப்பதா, வேண்டாமா என உரிய ஆலோ சனைக்குப் பின் முடிவெடுக்கப்படும் . 2008- 2009 ஆண்டில் விலைவாசி உயர்வு 9.1 சதவீதமாக இருந்தது. தற்போது கொரோனா காலத்திலும் விலைவாசி உயர்வை 6.2 ஆக கட்டுப்படுத்தியுள்ளோம். ஒன்றிய பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பட்ஜெ ட்டில் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத் துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், வளர்ச்சியை அடைவ தற்காக, நவீன இந்தியாவுக்கான உள்கட்ட மைப்பைக் கட்டியெழுப்ப பொதுச் செல வினங்களை மேற்கொள்ள விரும்பு கிறோம். வரவிருக்கும் 25 ஆண்டுகளில் கட்ட மைக்கப்படும் உள்கட்டமைப்பின் ஒருங்கி ணைந்த விளைவை அதிகரிக்க நாங்கள் நினைத்தோம். வரும் 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு முக்கியமானதாக இருக்கும். நாங்கள் அதை அம்ரித் கால் என்று அழைப்பதில் ஆச்சரியமில்லை என்று வேறு கூறிக்கொண்டார். இந்தியாவின் விவசாயத்தை மேம்படுத்துவதற்கும் நவீனமயமாக்கு வதற்கும் ஒரு கருவியாக அல்லது மிகவும் பயனுள்ள கருவியாக ட்ரோன்களை கொண்டு வருதல். நீங்கள் ட்ரோனைக் கொண்டு வரும்போது, அது பல தழுவல் களைப் பெற்றுள்ளது. ஆளில்லா விமான ங்களைக் கொண்டு வருவதன் மூலம், உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன் படுத்துவதில் நாம் செயல்திறனைக் கொண்டு வர முடியும் மற்றும் பயிர் அடர்த்தி யின் ஒரு நல்ல தொழில்நுட்ப உந்துதல் மதிப்பீட்டை மேற்கொள்ளவும் உற்பத்தி யின் அளவைக் கணிக்கவும் முடியும் என்று கூறினார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளின் கோரிக்கை களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கா மல் ,விவசாயத்தை மேம்படுத்தப்போவ தாக ஒன்றி அரசு கூறுகிறது.