tamilnadu

img

ஒன்றிய அரசு ஊழியர் சம்மேளன புதிய நிர்வாகிகள்

சென்னை,அக்.15- சென்னையில் நடைபெற்ற ஒன்றிய அரசு ஊழியர் மகாசம்மே ளன மாநில மாநாட்டில் புதிய  நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். சம்மேளனத்தின் மாநில செயல் தலைவராக எம்.துரைபாண்டியன், தலைவராக என்.ராஜேந்திரன், பொதுச்செயலாளராக ஆர்.பி.சுரேஷ், பொருளாளராக பி.முரளி தரன், துணைப் பொதுச்செய லாளராக எம்.எஸ்.வெங்கடேசன், உதவி பொதுச்செயலாளராக மனோகரன், துணைத் தலைவர்க ளாக எஸ்.சாம்ராஜ், கே.சந்திர மோகன், ஆர்.கிருபாகரன், சியாம் நாத் உள்ளிட்ட 28 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய  வேண்டும், முடக்கப்பட்ட 18 மாத  அகவிலைப்படியை உடனே வழங்க  வேண்டும், ரயில்வே, பாதுகாப்புத் துறை, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்காதே உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.