திருப்பத்தூர், செப்.14- நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலித் பெண் தலைவர் செப்.23க்குள் பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உறுதியளித்தார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி, மாதனூர் ஊராட்சி ஒன்றியம், நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்த லின் போது சுழற்சி முறையில் ஆதி திராவிடருக்கு (பெண்) ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் நாய்க்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு காமனூர் தட்டு கிராமத்தைச் சேர்ந்த இந்துமதி (26) கணவர் பெயர் பாண்டி யன் என்பவர், நாய்க்கனேரி கிராமத் தைச் சேர்ந்த பியூலா மேரி என்பவர் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார்கள். வேட்புமனு பரிசீலனை காலத்தில் பியூலா மேரி அவர்களின் மனு நிரா கரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்படி ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப் புக்கு போட்டியின்றி இந்துமதி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்த தேர்தல் ஆணைய அலுவலர் அதற்கான சான்றையும் வழங்கினார். இந்த சூழ்நிலையில், சாதிய சக்தி களின் எதிர்ப்பால் பதவியேற்பு நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும், அதே கிராமத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனித் தொகுதியாக அறிவித் ததை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஆனால், இந்த வழக்கில் இந்துமதி ஊராட்சி மன்றத் தலைவராக பதவி யேற்க கூடாது என்று உயர்நீதிமன்றம் ஓர் இடைக்கால தடை உத்தரவு வழங்குவதாக கூறி, ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை மாவட்ட தேர்தல் ஆணையமும் மாவட்ட நிர்வாகமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி யேற்க கூடாது என்று கூறி மறுத்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர்,திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், மாநிலத் தலைவர்கள் எஸ்.கே. மகேந்திரன், கே.சுவாமிநாதன், பி. சுகந்தி, மோகனா மாவட்ட நிர்வாகிகள் பி.காத்தவரா யன், குபேந்திரன், மணிமாறன், வழக்கறிஞர்கள் இரா.சிவா மருதன்,
பாலகுமாரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஓம்பிரகாஷ், வெங்கடேசன், சிபிஎம் எம்.காசி, ரவி, கேசவன், காமராஜ் ஆகியோர் செப். 12 அன்று மாவட்ட அதிகாரிகளை சந்தித்தனர். இதன் தொடர்ச்சியாக செப்.13 அன்று சமூக நீதி மறுப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, இந்த மாதம் 23 ஆம் தேதிக்குள் பதவி பிரமாணம் செய்து வைப்பதாக உறுதியளித்தார். இந்த சமூக நீதி போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சங்கரி, விடுதலை சிறுத் தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் ஓம்பிரகாஷ், வெங்கடேசன், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்ட தலைவர் பி.காத்தவரா யன், மாவட்டச் செயலாளர் வி. குபேந்திரன், திராவிடர் விடுதலை கழகம் மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான இரா.சிவா, வாணியம்பாடி செயலாளர் சுரேஷ் மற்றும் வழக்கறிஞர்கள் மருதன் பால குமாரன், சிபிஎம் ஆம்பூர் தாலுகா செயலாளர் மணிமாறன், திருப்பத்தூர் தாலுகா செயலாளர் எம்.காசி, கேச வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒன்றாக இணைந்து நடத்திய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.