tamilnadu

img

அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட படைப்புழு அதிக சேதத்தை உண்டாக்கக் கூடியது

புதுக்கோட்டை, ஜூலை 1- அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட படைப்புழு அதிக சேதத்தை உண்டாக் கக்கூடிய ஒரு அழிவுகரமான பூச்சி என  இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி டெரெக்ஸ்கஃபெல் தெரிவித்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறு வனம், கே.பி., இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த  பயிர்நலம் மற்றும் பாதுகாப்பு, நோமேடிக்ஸ்  ஆகிய நிறுவனங்கள் இணைந்து மக்காச் சோளத்தில் சென்சார் தொழில்நுட்ப உத வியுடன் படைப்புழுவைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் தொடர்பான செயல் விளக்கக் கருத்தரங்கத்தை புதுக் கோட்டையில் வெள்ளிக்கிழமை நடத்தின. நிகழ்விற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி டெரெக்ஸ்கஃபெல் பேசுகையில், “மக்காச் சோளத்தில் சேதத்தை ஏற்படுத்தும் படைப் புழு, அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இது அதிக சேதத்தை உண்டாக் கக் கூடிய ஒரு அழிவுகரமான பூச்சியா கும். தற்போது இப்பூச்சியானது மக்காச் சோளத்தில் மிகுதியான பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகிறது. 

இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த மின்னணு உணர்திறன் கொண்ட இனக்கவர்ச்சிப் பொறியை பயன்படுத்தும் சோதனை ஆராய்ச்சித் திட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் வம்பன் மற்றும் திரு வரங்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் நிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பூச்சிகளின் எண்ணிக்கை தரவு களை கணினி, மடிக்கணினி மற்றும் கைபேசி மூலம் எந்த இடத்தில் இருந்து வேண்டுமா னாலும் கண்காணிக்க முடியும்” என்றார். இங்கிலாந்து நாட்டு பயிர்நலன் மற்றும் பாதுகாப்பு வளர்ச்சி அலுவலர் ஜென்னா ரோஸ், எலிசபெத்ஹன்னா, ஜேம்ஸ்காட்பர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், வம்பன் தேசிய பயறுகள் வகை ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் விஞ்ஞானி ராஜாரமேஷ், புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி பூச்சிகள் இணைப்பேராசிரியர் எஸ்.வினோத் குமார், செயலாளர் எம்.ராஜாராம் உள்ளிட் டோர் பேசினர்.  கருத்தரங்கிற்கு முன்னதாக விஞ்ஞானி கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யாவைச் சந்தித்து, சென்சார் தொழில்நுட்பம் கொண்ட இனக் கவர்ச்சிப் பொறி பற்றிய ஆராய்ச்சி குறித்து கூறினர். முன்னதாக பயிர்நல அலுவலர் ஆர்.கணேசமூர்த்தி வரவேற்க, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள அலுவலர் டி.விமலா நன்றி கூறினார்.