நத்தம், மார்ச் 6- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரி யம்மன் கோவில் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு லிங்கப்ப நாயக்க மன்னரின் ஆட்சி யின் போது உருவானது என தல வராறு கூறுகிறது. இந்தக் கோவிலின் கருவறை முதல் கடைசி வெளிப் பிரகாரம் வரை முழுக்க முழுக்க செதுக்கப்பட்ட கருங் கற் களால் கட்டி முடிக்கப்பட்ட கோவிலாகும். இந்தக் கோவிலில் 22 கல் தூண்கள் நிலை நிறுத்தப்பட்டு, மேல்தளம் பட்டியல் கற்க ளால் நிறைவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோபுரத்திலும் பிரகாரத்தைச் சுற்றிலும் கலைநயம் மிகுந்த சிலைகள் வடிவ மைக்கப்பட்டுள்ளன. இவை பக்தர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளன. இக்கோவிலில் நடைபெறும் திரு விழாக்களில் பல நிகழ்ச்சிகள் நடந்தாலும் மாசி பெருந்திருவிழா தனிச்சிகரமாக பிரதி பலிக்கிறது. இந்த திருவிழா காலத்தின் போது பக்தர்கள் காப்பு கட்டுதல், 15 நாட்கள் விரதமிருத்தல், அக்கினிசட்டி எடுத்தல், கரும்புத்தொட்டில் கட்டுதல், அங்கப்பிர தட்சணம், மாவிளக்கு, பொங்கல் வைத்தல் மற்றும் கழுமரம் ஏறுதல், பூக்குழி இறங்கு தல், என்று பல்வேறு நேர்த்திக் கடன்கள் நிகழ்கின்றன. ஆண்டுக்கு ஆண்டு நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தகர்கள் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், நத்தம் பேரூராட்சி நிர்வாகம் ஆகியவை விரிவான ஏற்பாடு களை செய்துள்ளன. பாதுகாப்பு ஏற்பாடு களை நத்தம் காவல்துறையினர் சிறப்பாக செய்துள்ளனர், குழந்தைவேலு, நத்தம்