tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்கள் அந்த சிறை வாயிலில் எழுதி வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அந்த பட்டியலில் 80% பேர் கம்யூனிஸ்டுகள் என்பதை நான் பெருமையோடு கூறுவேன்.
1921ல் அகமதாபாத் மாநாட்டில் பூரண சுதந்திரம் எனும் முழக்கத்தை முதலாக முன்மொழிந்த மெளலானா ஹஸ்ரத் மொகானியும், சுவாமி குமாரானந்தாவும் கம்யூனிச கொள்கைகள் வழி நின்றவர்கள். ஒரு முஸ்லிமும், இந்துவும் இணைந்து தான் பூரண விடுதலை முழக்கத்தை முன்வைத்தார்கள். இதுவே இந்தியாவின் அடையாளமாகும்.