‘ரப்பர் தொழிலாளர் பிரச்சனையில் மனிதாபிமான நடவடிக்கை தேவை
நாகர்கோவில், ஜூலை 10- பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பி னர் மனோதங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது: அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பளத்தை வழங்காமல் முரண்பாடான நடவடிக்கைகளை நிர்வாகம் முன்னெ டுப்பது கடுமையான கண்டனத்திற்குரி யது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கி வந்த நிலையில், தற்போது 10 ஆம் தேதியாகியும் தொழிலாளர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்க இயலாதது ஏன்? பெரும் செல்வம் கொழிக்கும் திறனுடைய ரப்பர் உற்பத்தித்துறை, வேலை செய்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத சூழலில் உள்ளது என்பது வெட் கக்கேடானது. கடுமையான சவால்களை எதிர்கொண்டு தங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக உழைக்கும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது.
தொழிலாளர்கள் தங்கள் உழைப்பிற் கேற்ற ஊதியத்தை தரக்கோரி வரலாறு காணாத அளவில் 2016 ஆம் ஆண்டு முதல் பலகட்ட போராட்டங்கள் நடத்தி யும் அரசால் தீர்வளிக்க முடியவில்லை. இது தொழிலாளர்கள் மீது அரசுக்கு இருக் கும் அக்கறையின் அளவை காட்டு கிறது. இதில் வியத்தகு விஷயம் என்ன வென்றால் முதலமைச்சரை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்ன ரும் தீர்வளிக்க முடியவில்லை என்பதே. இது வெறும் 1700 தொழிலாளர்கள் சந்திக் கும் பிரச்சனையல்ல, மாறாக இது 1700 குடும்பங்கள் சார்ந்த வாழ்வாதார பிரச்சனை. எனவே அரசு இதன் தாக்கத் தையும் வீரியத்தையும் உணர்ந்து மனிதா பிமானத்துடன் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதோடு அவர்கள் நீண்ட நாட்களாக போராடி வரும் பிரச்ச னையான புதிய சம்பள ஒப்பந்த பிரச்ச னைக்கும் உரிய தீர்வு காண வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
மும்மடங்கு ஊரடங்கை மீறுவது கைமீறிய விளையாட்டு: கே.கே.சைலஜா
திருவனந்தபுரம், ஜுலை 10- உயிரிழப்பை ஏற்படுத்துவதற்கல்ல மும் மடங்கு ஊரடங்கு எனவும், பூந்துறையில் எதிர்க்கட்சி யினர் நடத்திய போராட்டம் கைமீறிய விளை யாட்டு. மக்களை காப்பாற்றுவதே முக்கியம் என வும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறினார். வெள்ளியன்று செய்தியாளர்களிடம் இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: நோய் பரவல் மிகவும் தீவிரமான நிலைக்கு செல்கிறது. திருவனந்தபுரத்தில் பூந்துறை, மணக்காடு பகுதிகளில் உள்ள அத்தீவிர பரவலை எச்சரிக்கை யுடன் பார்க்க வேண்டும். மாநிலத்தில் நோய் பர வலை குறைக்கவும், உயிரிழப்பை தடுக்கவும் கடந்த நான்கைந்து மாதங்களாக சுகாதாரத்துறை உள் ளிட்டவை கடுமையாக உழைத்து வருகின்றன. பூந்துறையில் போதிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் நடத்தப்பட்டு வருகின்றன. உதவி மையங்கள் உள்ளன. பரிசோதனை ஏற்பாடுகளும் உள்ளன. சுகாதாரத் துறையைச் சேர்ந்த தன்னார்வலர் களும், அங்கு தீவிரமாக செயல்பட்டு வருகின்ற னர். இந்நிலையில் பூந்துறையில் மோதல்கள் வெடித்தன. இதைத் தூண்டியது யார் என்று தெரிய வில்லை. ஆன்டிஜென் சோதனைக்கு எதிராக அங்கு ஒரு பிரச்சாரம் நடந்து வருகிறது பி.சி.ஆர் சோதனை உண்மையானது, ஆன்டிஜென் சோதனை தவறானது என்பதே அந்தப் பிரச்சாரம். உண்மையில் ஆன்டிஜென் சோதனை பி.சி.ஆர் சோதனைக்கு சமமானதே. ஆன்டிஜென் பரிசோதனையின் முடிவு நம்பகமானது.
பூந்துறையில் ஜூலை 6 க்கு பிறகு 1196 சோத னைகள் நடத்தப்பட்டதில் 249 இல் நோய் தொற்று உறுதியானது. இது அதி தீவிர பரவலின் (சூப்பர் ஸ்பிரெட்) ஒரு பகுதியாகும். பூந்துறை பகுதியில் கடு மையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளபோதி லும் தடையை மீறி பலர் வீதிகளில் இறங்கினர். இது யாருடைய தூண்டுதலாக இருந்தாலும், அது ஆபத்தானது. பூந்துறையில் உள்ள மூன்று வார்டு களில் 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இதில் 5611 பேர் முதியவர்கள். ஐந்து வயதிற்குட்பட்ட 2,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். தீவிர மாக கோவிட் பரவிவரும் கட்டத்தில் அவர்கள் அனைவருக்கும் சிறப்பு கவனம் தேவை. உயிர்வாழும் ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. உயிர்களை காப்பாற்ற நியமிக்கப்பட்ட வர்கள் சுகாதார ஊழியர்கள். மருத்துவர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர். இன்று (வெள்ளி) ஒரு மருத்து வரின் கார் மீது தாக்குதல் நடந்ததாக நான் கேள்விப்படுகிறேன். அதைக் கேட்க பயமாக இருக்கிறது. அத்தகைய தாக்குதல் நடந்தால், மக்களுக்கு உதவ யார் இருப்பார்கள்? இன்று என்ன நடந்தது என்று தெரியவில்லை. கோவிட் கட்டுப்பாடுகளை புறக்கணித்து ஏராள மானோர் தெருவில் இறங்கியது அச்சமூட்டுகிறது. சட்டத்தையும், கோவிட் பாதுகாப்பையும் மீற வேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்கிறேன். இது கைமீறிய விளையாட்டாகும். போராட்டம் நடத்தலாம், ஆனால் ஒரு வகையிலும் கட்டுப்பா டும், முக கவசமும் இல்லாமல் கூட்டமாக சேர்ந்து நடத்தும் போராட்டம் கேரளத்தில் வைரஸ் பர வலுக்கு வழிவகுக்கும். ஏராளமான உயிரிழப்புக்கு வழிவகுத்துவிடும். தயவு செய்து கேரளத்தை பெரியதொரு ஆபத்துக்கு இட்டுச்செல்ல வேண்டாம் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.