சென்னை,ஜன.25- முரசொலியில் பிழை திருத்தும் பிரிவில் தனது பணியை துவக்கியவர் ராஜா. பிறகு, செய்தியாளர், துணை ஆசிரியராக உயர்ந்தார். தனது அயராத உழைப்பால் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக திறம்பட பணியாற்றி வந்தார். பொங்கலன்று எதிர் பாராத விதமாக விபத்துக் குள்ளாகி, குரோம் பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு அனுமதிக் கப்பட்டார். இந்தத் தகவலை அறிந்ததும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்ட மன்ற உறுப்பினர் இ.கருணா நிதி ஆகியோர் மருத்து வமனை நிர்வாகத்தை தொடர்புகொண்டு, அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினர். ஆனாலும், சிகிச்சை பல னின்றி ஜன.24 அன்று உயிரி ழந்தார். 54 வயதாகும் ராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட் டோர் மாலை அணிவித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
சங்கங்கள் இரங்கல்
ராஜாவின் மறை விற்கு சென்னை பத்திரி கையாளர் மன்றத்தின் தலை வர் மணிமாறன், பொதுச் செயலாளர் எல்.ஆர்.சங்கர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (டியூஜெ) மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருசோ த்தமன் ஆகியோர் வெளி யிட்டிருக்கும் இரங்கல் அறி க்கையில், முரசொலியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, திறம்பட பணி யாற்றி முன்னாள் முதல்வர் கலைஞரின் அன்பைப் பெற்ற அவரது மறைவு முரசொலிக்கு பேரிழப்பா கும். அவரது மறைவினால் தவிக்கும் குடும்பத்தார், நண்பர்கள், முரசொலி ஊழியர்கள் அனைவரு டனும் துயரத்தை பகிர்ந்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.