tamilnadu

img

பன்முக திறமை வாய்ந்த கம்யூனிஸ்ட் தோழர் கோ.பாரதிமோகன் - சின்னை. பாண்டியன்

பன்முக திறமை வாய்ந்த கம்யூனிஸ்ட் தோழர் கோ.பாரதிமோகன் - சின்னை. பாண்டியன்

மலேயாவில் 1929 ஆவணி 11ஆம் நாள் கோவிந்த சாமி-தையல்நாயகி தம்ப திக்கு மகனாகப் பிறந்தார் பாரதிமோ கன். இவரது குடும்ப பூர்வீகம் மயிலாடு துறை. தாய் மாமன் மலேயா கணபதி, இவர் சிறுவனாக இருக்கின்ற பொ ழுதே தொழிலாளர்களுடைய கூட் டங்களுக்கு அழைத்துச் சென்றார். மலபார் புரட்சி, வங்கப் புரட்சி, மா சே துங் வாழ்க்கை வரலாறு போன்ற நூல்கள் இவருக்கு கம்யூனிஸ்ட்டுகள் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது. மலேயா வில் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பி னரானார்.

தமிழகத்திற்கு வருகை

ஜப்பானிய ராணுவம் தேடிக்கொ ண்டிருந்த சூழலில், 1949 ஜனவரி முதல் தேதி நாகப்பட்டினத்தை வந்த டைந்தார். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம். மாவட்டச் செயலாளர் ஏ.எம்.கோவிந்தராஜன் அவர்கள், தோழர் பாரதிமோகனை கட்சியின் உறுப்பினராக்கி பொறை யார், தரங்கம்பாடி, திருக்கடையூர் பகுதியில் கட்சிப் பணிகளை செய்யச் சொன்னார். வெகு விரைவில் மயி லாடுதுறை அமைப்புக்குழு உரு வாக்கப்பட்டது. வீரமும் தீரமும் நல்லாவூர் கிராமத்தில் நிலப்பிரபு வின் காரியதரிசி ஐயர் குத்தகை விவசாயிகளை கொடுமைப்படுத்தி, பட்டியல் இன இளம் பெண்களை முதலிரவுக்கு வர நிர்பந்தித்தார். இதை அறிந்த தோழர் பாரதிமோகனும், ஏ.எம்.கோவிந்தராஜனும் இதற்கு முடிவுகட்ட முயற்சித்தனர். சருக்கை கிராமத்தில் ஐயர் மீது தாக்குதல் நடந்து, அவர் கொலையானார். காவல்துறை பாரதிமோகனை தேடிய போது, காஞ்சிவாய் கிராம மக்கள் அவரை காட்டிக்கொடுக்காமல் காத்தனர்.

சருக்கை சதிவழக்கும் சிறைவாசமும்

சருக்கை சதி வழக்கில் பாரதிமோ கன் உட்பட 11 பேர் மீது சதி வழக்கு பதிவாகி, ஆறு வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப் பட்ட பின் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டக் குழுவில் இணைக்கப் பட்டார். 100 பேர் கொண்ட தமிழ் மாகாண கவுன்சிலிலும் தேர்ந்தெடுக் கப்பட்டார்.

புதிய கட்சி உருவாக்கமும் சட்டமன்ற வெற்றியும்

1964 ஆம் ஆண்டில் சீன-இந்திய யுத்தத்தால் ஏற்பட்ட பிளவின் போது  கே.ஆர்.ஞானசம்பந்தம், கோ.பாரதி மோகன் உள்ளிட்ட 31 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி னர். 1967இல் குத்தாலம் தொகுதி யில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்றத்தில் குத்தகை விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்களுடைய பிரச்சனை களை வலுவாக எடுத்துரைத்தார்

. குடும்ப வாழ்க்கை

1968 ஜூலை 13ஆம் தேதி தோழர் கே.ஆர்.ஞானசம்பந்தம் தலை மையில் மிக எளிமையாக தோழர் குஞ்சிதத்தை மணந்தார். இவர்க ளுக்கு குணவதி, மார்க்ஸ் என இரண்டு குழந்தைகள் பிறந்தனர். தன்னுடைய குடும்பத்தையே - மனைவி, மகன், மகள் அனைவரையும் இயக்க மாக்கியவர்.

தொழிற்சங்க பணிகள்

1970-இல் தஞ்சை மாவட்ட சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலாளராக செயல்பட்டார். எஸ்.ஆர்.வி.எஸ், கைத்தறி, உருட்டாலை, சுருட்டு, மோட்டார், பஞ்சாலை, சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் சங்கங்களை அமைத்தார். 1975-இல் அவசரநிலை காலத்தில் ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தார். குருங்குளம் சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார். அப்பகுதி மக்கள் அவர் பெயரில் குடியிருப்புப் பகுதியை அமைத்தனர்.

கட்சிப் பணிகளும் பன்முகத் திறமைகளும்

1981 முதல் 1988 வரை கட்சியி ன் மாவட்டச் செயலாளராக திறம்படச் செயல்பட்டார். மனைவி தோழர் குஞ்சி தம் அவர்களை அரசியல் பயிற்று வித்து, ஒன்றுபட்ட மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக 19 ஆண்டு காலம் செயல்பட வைத்தார். 1991இல் கணவன் மனைவி இருவரும் மாநி லக் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவராக இருந்து தஞ்சை மாவட்டத்தில் கலை இலக்கிய அமைப்பை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றினார். மிகச்சிறந்த தத்துவ ஆசிரியராக விளங்கி, கட்சி அணிகளுக்கு தத்துவத்தையும் அரசியலையும் போதித்தார். கட்சி, விவசாயிகள் சங்கம், தொழிற்சங்கம், எழுத்தாளர் அமைப்பு என்று பன்முக பணிகளை மிகத் திறமையோடு செய்து காட்டியவர்.  தான் கொண்ட கொள்கையில் உறுதியாக தீரத்துடன் செயல்பட்ட பாரதிமோகன் 2002 மே 18 அன்று இயற்கை எய்தினார். பல்லாயிரக்க ணக்கான தோழர்கள் மக்கள் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியதே அவர் செய்த மக்கள் பணிக்கு சாட்சி யாக இருந்தது.