கரும்புக்கான பாக்கித்தொகை வழங்கக் கேட்டு கடந்த 53 நாட்களாக போராடி வரும் திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமையன்று (ஜன.21) திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகில் உள்ள அத்திமாஞ்சேரிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விச மத்தியக் குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன், மாவட்ட நிர்வாகிகள் கோ.சம்பத், சி.பெருமாள் உட்பட்ட பலர் பேசினர்.