tamilnadu

img

திரைப்படங்கள் ஆரோக்கியமான சிந்தனைகளைத் தூண்ட வேண்டும்

திரைப்பட விழாவில் உ.வாசுகி பேச்சு

புதுக்கோட்டை, ஜூன் 10-  திரைப்படங்கள் ஆரோக்கியமான விவாதங்களையும் சிந்தனைகளையும் தூண்ட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி பேசினார். இந்திய மாணவர் சங்கமும், இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கமும்  இணைந்து உலக திரைப்பட விழாவை  ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் புதுக் கோட்டையில் நடத்தி வருகின்றன.  திரைப்பட விழாவை தொடங்கி வைத்து உ.வாசுகி பேசியதாவது: ‘‘1895-ஆம் ஆண்டு லூமியர் சகோ தரர்கள் பாரீஸ் நகரில் முதன்முதலாக ஓடும் படத்தை வெளியிட்டனர். தற்பொ ழுதுள்ள தொழில்நுட்பத்தில் திரைப்  படங்கள் மிகப்பிரம்மாண்டமான  வளர்ச்சியை பெற்றுள்ளன. பிரதான நீரோட்ட திரைப்படங்கள் பல ‘எதார்த்தம்’ என்ற பெயரில் பிற்  போக்குத்தனமான விசயங்களை முலாம்பூசி மீண்டும் மீண்டும் மக்களின்  மூளைக்குள் திணித்துக்கொண்டிருக் கின்றன.  பெண்களைப் பற்றிய தவறான சித்த ரிப்பு, தியாகத்தில் மெழுகுவர்த்தியாக, போதைப்பொருளாக சித்தரிப்பது, பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளி யையே திருமணம் செய்ய வைப்பது,  இருதார மணத்தை நியாயப்படுத்து வது, இஸ்லாமியர்களை தீவிரவாதி களாகக் காட்டுவது, கொடுமை செய்யும் மிராசுதார்களுக்கு தலித் மக்கள் விசு வாசிகளாக இருப்பதை சிறந்த குண நலனாக சித்தரிப்பது, ஜனநாயக நீரோட்  டத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் வந்து விட்ட பிறகும் ‘நாட்டாமை’ போன்ற படங்களை எடுத்து ஜனநாயக மாண்பு களை பின்னுக்குத் தள்ளுவது என தமிழ்  சினிமா பல்வேறு வகையாக பிற்போக்  குத்தனமான படங்களைத் தந்துள்ளது.  அதே நேரத்தில் பல தரமான படங்களை யும் தமிழ் சினிமா தந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

பொதுவாக திரைப்படங்கள் மக்க ளின் மனநிலையை கட்டமைப்பதில் முக்  கியப் பங்கு வகிக்கின்றன. ஜெர்மனி யில் யூதர்கள் கொல்லப்பட்டபோது பல  படங்களில் அதை நியாயப்படுத்தி மக்க ளின் மனநிலை கட்டமைக்கப்பட்ட பிறகு தான் அத்தகைய கொடூரமான சம்ப வங்கள் நடத்தப்பட்டன. தற்பொழுது உள்ள ஒன்றிய அரசாங்  கம் தங்களின் தவறுகளை நியாயப் படுத்த ‘காஷ்மீர் பைல்ஸ்’ மாதிரியான  படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்  கின்றன. இடதுசாரி மாடலை முன்னி றுத்தும் கேரள அரசை அவதூறு செய்  யும் விதமாக ‘கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிடுகின்றனர். 

இத்தகைய திட்டமிட்ட சதிச் செயல்  களை அம்பலப்படுத்த வேண்டும். பொதுவாக படங்களை விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்த்துப்பழக வேண்டும். திரைப்படங்கள் ஆரோக் கியமான விவாதங்களையும் சிந்தனை களையும் தூண்ட வேண்டும். தவறாக மூளைச்சலவை செய்யக்கூடாது. இந்நிலையில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் - கலைஞர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் இதுபோன்ற உலகத்  திரைப்பட விழாக்களை நடத்திவருவது  மிகுந்த பாராட்டுக்கு உரியது. நாம் தேடி னாலும் கிடைக்காத உலகலாவிய பல  தரமான படங்கள் நம்மை தேடி வந்தி ருக்கின்றன. நல்ல படங்கள் நமது  பல்வேறு கேள்விகளுக்கு விடை களைத் தேடித்தரும். சோர்வுற்று இருக்  கும் நேரங்களில் புத்துணர்ச்சி அளிக்  கும். சாத்தியமானதல்ல என்று நாம்  ஒதுக்கிய விசயங்களை சாத்தியப்படுத்  தும். இந்தத் திரைப்பட விழாவை மாண வர்களும், இளைஞர்களும் நல்ல முறை யில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடக்க விழாவுக்கு மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.சந்தோஷ் குமார் தலைமை வகித்தார். தமுஎகச திரை இயக்க ஒருங்கிணைப்பாளர் களப்பிரன் திரைப்பட விழாவின் நோக்  கத்தை விளக்கிப் பேசினார்.

திரைப்  படங்கள் குறித்து திரை துறை பேரா சிரியர் எம்.சிவக்குமார் பேசினார். வாலி பர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.கார்த் திக், மாணவர் சங்க மாநில துணைத் தலைவர் தௌ.சம்சீர் அகமது, சிபிஎம்  மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன்,  தமுஎகச நிர்வாகிகள் ஜீவி, ராசி.பன் னீர்செல்வன், எம்.ஸ்டாலின் சரவணன், கி.ஜெயபாலன், மு.கீதா, புதுகை பிலிம் சொசைட்டி தலைவர் எஸ்.இளங்கோ, திரைப்படப் பாடலாசிரியர் இரா.தனிக்கொடி, புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சு.மதியழகன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக வாலிபர் சங்க மாவட்டச்  செயலாளர் ஆ.குமாரவேல் வரவேற்க,  மாணவர் சங்க நகரத் தலைவர் எம்.மகா லெட்சுமி நன்றி கூறினார். ஏ.பாலாஜி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.