முதல்வரிடம் மாதர் சங்கத் தலைவர்கள் முறையீடு!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் அ.ராதிகா, பொருளாளர், ஜி.பிரமிளா ஆகியோர் மார்ச் 7 (வெள்ளியன்று) நேரில் சந்தித்தனர். அப்போது, பெண்கள் - குழந்தைகள் மீதான அதிகரிக்கும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி விபரங்கள் அடங்கிய மனு அளித்தனர்.