சென்னை, பிப்.21- தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு தனது வணக் கத்தைச் செலுத்துகிறேன் என மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரி வித்துள்ளார். உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள டிவிட்டர் செய்தி யில் உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாது காக்கவும் உரிமைகளை நிலை நாட்டவும் போராடிய தியாகி யருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர் வெழுச்சி கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி - அனைத்து மொழிகளும் சம மாக நடத்தப்படும் அனைவ ருக்கும் சமமான இந்தியா வைக் காண நாம் அனை வரும் உறுதியேற்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.