tamilnadu

img

கனமழையால் வீடு, கிணறு இடிந்து விழுந்தது

கடமலைக்குண்டு, அக்.18- தேனி மாவட்டம், மயிலாடும்பாறை கிராமத்தில் திங்கள்கிழமை  இரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கனமழை காரணமாக மயிலாடும் பாறை கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. சம்பவத்தின் போது செல்வம் வீட்டில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பினார். இதே போல மயிலாடும்பாறை வடக்கு தெருவில் அமைந்துள்ள மந்தையம்மன் கோவில் முன்புறம் இருந்த 100 ஆண்டு கள் பழமையான கிணறு கனமழைக்கு இடிந்து விழுந்தது. செவ்வாய்க்கிழமை காலையில்  மயிலாடும் பாறை ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி அன்பில் சுந்தரம் மழைக்கு இடிந்து விழுந்த  வீட்டை பார்வையிட்டு,அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் வீட்டை சீரமைக்க உரிய நிவாரணம் பெற்றுத்தருவதாக தெரிவித்தார்.