tamilnadu

img

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

புதுதில்லி, டிச. 13 - அருணாசலப் பிரதேசத்தில், சீன ராணுவ ஊடுருவல் மற்றும் இந்திய - சீன  ராணுவ வீரர்களுக்கு இடையேயான மோதல் குறித்த விவாதத்திற்கு, மோடி அரசு மறுத்ததால் நாடாளுமன்றத்தில் செவ்வா யன்று கடும் அமளி ஏற்பட்டது.  காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் வெளிநடப்பு செய்து போராட்டம் நடத்தினர். இந்தியா - சீனா இடையே நீண்டகால மாகவே எல்லைப் பிரச்சனை நீடித்து வரு கிறது. குறிப்பாக, வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பிராந்தியங்கள் தங்களது நாட்டிற்கு  சொந்தமானது என இரு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலகட்டத்தில் கடந்த 1962-ஆம் ஆண்டு இந்தியா - சீன  இடையே யுத்தம் ஏற்பட்டது. அதன்பின்னர் சுமார் 58 ஆண்டுகளில் இருநாடுகளுக்கும் இடையே பெரிய மோதல்கள் எதுவும் ஏற்படவில்லை.

இதனிடையே, கொரோனா தொற்றுப்  பரவலின் போது, இந்தியா, அமெரிக்கா வோடு சேர்ந்து கொண்டு, சீனாவுக்கு எதி ராக குற்றச்சாட்டுக்களை வைத்த பின்னணி யில், கடந்த 2020 ஜூன் 15-ஆம் தேதி,  கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத் தாக்கு எல்லைப் பகுதியில் இந்திய - சீன  வீரர்களுக்கு இடையே, கடுமையான கை கலப்பு ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள்  கொல்லப்பட்டனர். சீனத் தரப்பில் 38 பேர்  பலியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், சீனா தங்கள்  தரப்பில் 4 பேர் உயிரிழந்ததை உறுதி செய்தது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின்னர், இரு நாடுகளுக்கு இடையேயும் பல்வேறு கட்டங்களாக அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில்  எந்தவித உடன்பாடுகளும் எட்டப்பட வில்லை. மறுபுறத்தில், அருணாசலப் பிர தேச எல்லையில் சீனா கட்டுமானங்களை மேற்கொண்டு வருவது போன்ற செயற்கைக்கோள் புகைப்படங்களும் வெளியாகின. ஆனால், அதுபற்றி இந்திய  அரசு வெளிப்படையாக எதுவும் தெரி விக்கவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமே இவ்விவகாரம் குறித்து தொடர்ச்சியாக பேசி வந்தனர்.

இந்நிலையில்தான், அருணாசலப் பிரதேச எல்லைப் பகுதியிலுள்ள தவாங் செக்டாரில் டிசம்பர் 9-ஆம் தேதி இரவு, இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உடனடியாக எந்த தகவலும் வெளியாகாத நிலையில், அருணாசலப் பிரதேசத்தின் தவாங்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர் களை விட சீன ராணுவ வீரர்கள் அதிக  அளவில் காயம் அடைந்ததாக இந்திய பாது காப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி  இந்தியாவின் முக்கிய ஆங்கில நாளித ழான ‘தி இந்து’ செய்தி வெளியிட்டது.  இந்திய ராணுவ வீரர்கள் தரப்பில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்; இவர்களில் 6 பேர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி யது. செய்தியின் உண்மைத்தன்மை குறித்த சர்ச்சைகளும் முன்னுக்கு வந்தன. இதையடுத்து, 3 நாட்களுக்குப் பிறகு,  டிசம்பர் 12-ஆம் தேதிதான்- தவாங் செக்டரில் சீன ராணுவத் துருப்புக்கள் நுழைந்ததாகவும், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்ததாகவும் இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்தனர்; மோதலுக்குப் பின், இரு நாட்டு வீரர்களும் உடனடியாக அங்கிருந்து பின்வாங்கி, தத்தமது நிலைக ளுக்குத் திரும்பி விட்டனர் என்றும் இந்திய ராணுவம் கூறியது.  இதையடுத்து, மோதல் நடந்த போதே இதுபற்றி ஒன்றிய அரசு நாட்டிற்கு தகவல் தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி கள் எழுந்தன. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இரு அவைக ளிலும் இப்பிரச்சனையை கிளப்பின. விவாதம் நடத்த வேண்டும் என்று நோட்டீஸ் அளித்தன.

“சீனாவின் ஊடுருவல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்;  நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை  ஏற்படுத்த வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தினார். சீனா வின் ஊடுருவல் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் எம்.பி.க்கள் மணீஷ் திவாரி, சையத் நசீர் ஆகி யோர் முறையே, மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர். இந்த விவ காரத்தில், சரத்து 267-இன் கீழ் ஒன்றிய அரசு மாநிலங்களவை யில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று திரிணா முல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.  மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசியும் இவ்விவகாரம் தொ டர்பாக விவாதம் நடத்த வேண்டுமென வலியுறுத்தினார். “டிசம்பர் 9-ஆம் தேதி மோதல் நடந்தது, ஆனால், இன்றுதான் (டிசம்பர் 12) அறிக்கை விடுகிறீர்கள். மீடியாக்கள் இதனை  செய்தியாக்காமல் இருந்திருந்தால் நீங்கள் (மோடி அரசு) பேசியிருக்க மாட்டீர்கள். சீனாவின் பெயரைச் சொல்லவே பிரதமர் பயப்படுகிறார். அவரது அரசாங்கமும் பயப்படு கிறது” என்று ஒவைசி குறிப்பிட்டார். மோதல் நடந்த இடத்திற்கு அனைத்துக் கட்சிகளையும் அழைத்துச் செல்லுங்கள் என்றும் கூறினார். இதையடுத்து, அருணாசலப் பிரதேசத்தில் சீனாவின் ஊடுருவல் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று விளக்கம் அளிப்பார் என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது. முன்ன தாக, முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான்,  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கை நேரில் சந்தித்து, எல்லை நிலவரம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டார். 

செவ்வாயன்று முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத் தின் இரு அவைகளும் கூடிய நிலையில், 2001-ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின்போது நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களு க்கு மக்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் சீனா ஊடுருவல், தாக்குதல் முயற்சிகள் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், குளிர்காலக் கூட்டத்தொடரின் இன்றைய அலுவல்களை உடனடியாக ஒத்திவைத்துவிட்டு எல்லைப் பிரச்சனை குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டுமென்றும், அவை களில் விவாதம் நடத்த வேண்டுமென்றும் முழக்கங்களை எழுப்பினர். இதனால், இரு அவைகளும் முற்பகல் முழு வதும் ஒத்திவைக்கப்பட்டன. பகல் 12 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடின. அப்போது, மக்களவையிலும் அதைத்தொடர்ந்து மாநிலங்க ளவையிலும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  சீனாவின் அத்துமீறல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், “அருணாசலப் பிரதேச மாநி லம் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதியில் டிசம்பர் 9-ஆம் தேதி சீன ராணுவத்தினர் ஊடுருவி ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டனர். நமது ராணுவத்தினர் சீன ராணுவத்தின் இம்முயற்சிகளை எதிர்கொண்டு முறியடித்து அவர்களது நிலைகளுக்கே திரும்பச் செய்தனர். இச்சம்ப வம் தொடர்பாக ராஜதந்திர வழிகளில் சீனாவின் கவனத்து க்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நமது நாட்டின் எல்லைக ளைப் பாதுகாப்பதற்கும் அதை மாற்றி அமைக்கும் முயற்சி களை முறியடிப்பதற்கும் நமது ராணுவ வீரர்கள் உறுதி யாக உள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து டிசம்பர் 11-ஆம் தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே யான பேச்சுவார்த்தை நடைபெற்றது. எல்லை ஊடுருவல் முயற்சிகளை சீன ராணுவம் மறுத்ததுடன் எல்லையில் அமைதி நிலைநாட்டப்படும் எனவும் தெரிவித்தது. இரு தரப்பிலும் ராணுவ வீரர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.  இந்த நிகழ்வில் நமது ராணுவ வீரர்கள் கொல்லப்படவோ, படுகாயமடையவோ இல்லை என்பதை அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது ராணுவம் உரிய நேரத் தில் நடவடிக்கையில் இறங்கியதால் சீன ராணுவத்தினர் தங்களது நிலைகளுக்கு திரும்பிச் சென்றனர்” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஆனால், இதனை ஏற்காத எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராஜ்நாத் சிங் முன்வைத்த அறிக்கை மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க் கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். பாஜக அரசு அதற்கு அனுமதிக்கவில்லை. “இந்த விவகாரம் உணர்வுப்பூர்வமா னது என்பதால், எந்த விவாதத்தையும் அனுமதிக்க முடி யாது” என்று மாநிலங்களவைத் துணைத்தலைவர் ஹரி வன்ஷ் கூறினார். கடந்த காலங்களிலும் இதுபோன்ற உணர்ச்சிகரமான பிரச்சனைகள் குறித்து அவையில் எந்த  விவாதமும் அனுமதிக்கப்படவில்லை என்பதற்கு, நான்கு முன்னுதாரணங்களையும் அவர் மேற்கோள் காட்டினார். ஆனால், இதனை ஏற்காத எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் நரேந்திர மோடி அரசு சமரசம் செய்வதாக குற்றச்சாட்டுக்களை எழுப்பி நாடாளு மன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் வெளிநடப்பு செய்த னர். காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, ஆர்ஜேடி, சமாஜ்வாதி, சிவசேனா, ஜேஎம்எம் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பில் பங்கேற்றன. இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்க ளைச் சந்தித்தார்.

அப்போது, “நாட்டில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக ஆட்சி இருக்கும் வரை யில் நமது நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தை கூட எவரா லும் ஆக்கிரமிக்க முடியாது” என்றும், “மக்களவையில் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் (சோனியா, ராகுல் காந்தி க்கு சொந்தமானது) வெளிநாட்டு நிதி உதவி சட்ட மீறல் கள் தொடர்பான விவாதத்தை தடுக்கவே இந்தியா - சீனா மோதல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி இருக்கின் றன” என்றும் சமாளித்தார். மேலும், நாடாளுமன்ற மக்கள வையில் கேள்வி நேரம் நடைபெறுவதை எதிர்க்கட்சிகள் அனுமதிக்கவில்லை என்றும்; எதிர்க்கட்சிகளின் இந்த நடவ டிக்கைக்கு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமித்ஷா கூறினார். ஆனால், “எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவரால் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், சொன்னபடி செய்யவில்லை; எதிர்க்கட்சிகளின் பேச்சைக் கேட்க, அரசு தயாராக இல்லை, இது நாட்டுக்கு நல்லதல்ல” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக சாடினார். “பாதுகாப்புத்துறை அமைச்சர், அவரது அறிக் கையை படித்து விட்டு வெளியே சென்று விட்டார். அவர் எந்த விளக்கத்திற்கும் விவாதத்திற்கும் தயாராக இல்லை. ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் எப்சிஆர்ஏ (FCRA) உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் நாங்கள் தவறு செய்ததை  நிரூபித்தால் தூக்குத் தண்டனைக்கும் தயார்” என்றும் அமித்ஷாவுக்கு, கார்கே சவால் விடுத்தார்.