tamilnadu

தென் மாநிலங்களைச் சுரண்டும் மோடி அரசு

தென் மாநிலங்களைச் சுரண்டும் மோடி அரசு

எங்களுக்கு 15%; உ.பி.க்கு மட்டும் 18% நிதி ஒதுக்கீடு

ஒன்றிய பாஜக அரசு நிதி ரீதியாக  தென் மாநிலங்களைச் சுரண்டுவதாக வும், இந்த மாநிலங்கள் செலுத்தும் வரி வருவாயை எடுத்து, வட இந்தியா வுக்கு அள்ளிக் கொடுப்பதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லங்களவை உறுப்பினர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. சாடினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 2025-ஆம் ஆண்டு நிதிச்  சட்டமுன்வடிவு விவாதத்தில் பங்கேற்று ஜான் பிரிட்டாஸ் எம்.பி. பேசினார். அப் போது, மேலும் அவர் பேசியதாவது: நிதிக்கொள்கையை உருவாக்குவது பம்பாய் கிளப்பா, நாக்பூர் கிளப்பா? மாண்புமிகு உறுப்பினர் ஏ.டி. சிங், நம் நாட்டின் நிதிக் கொள்கை பம்பாய் கிளப்பால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

அது பம்பாய் கிளப்பா அல்லது நாக்பூர்  கிளப்பா அல்லது குஜராத் கிளப்பா என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு விஷயத்தைக் கூறிக்கொள்ள விரும்பு கிறேன். இது கேரளாவிற்கு எதிராகவும் தென் இந்தியாவுக்கு எதிராகவும் கடு மையாக உருவாக்கப்பட்ட ஒன்று என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெற்கு வட இந்தியாவின் காலனியாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான ஒரு நிதியமைச்சரே, இவ்வாறு பாகுபாடு காட்டப்படுவதன் ஓர் அங்கமாக இருக்கிறார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. நாட்டின் ஜனத்தொகையில் 18 விழுக்காடாக இருக்கிற- தென்மாநிலங்களாகிய நாங்கள், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 35 விழுக்காடு செலுத்தி க்கொண்டிருக்கிறோம் என்பதை நிதியமைச்சருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். மாறாக எங்களுக்கு என்ன கிடைக்கிறது? 15-ஆவது நிதி ஆணையம் 41 விழுக்காடு அளவிற்கு நிதிப் பகிர்வு பரிந்துரையை அளித்திருந்தது. ஆனால், மாநிலங்களுக்கு 30 விழுக்காடு அளவிற்குக்கூட நிதிப் பகிர்வு அளிக்கப்படவில்லை.

 வட இந்தியாவிற்கான  வேட்டைக் காடான தெற்கு! 2023-24 நிதியாண்டில் தென் மாநி லங்களுக்கு வருவாய்ப் பகிர்வு என்பது 15.7 விழுக்காடாக இருந்தது. அதாவது, 1.62 லட்சம் கோடி ரூபாய்கள். உத்த ரப்பிரதேசத்திற்கு மட்டும் 1.83 லட்சம் கோடி. அதாவது 18 விழுக்காடு.  இப்போது ஆட்சியாளர்கள் பின்பற்றிடும் புதிய வழிமுறை என்ன தெரியுமா? “செயல்படு, அழிந்துபோ” என்பதாகும். அன்றொருநாள் நட்டா ஜி, “கேரளா முன்னேறியிருப்பதால் அதற்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கொடுக்கப்பட மாட்டாது” என்று கூறினார்.  இவ்வாறு இந்த ஆட்சியாளர் களைப் பொறுத்தவரை எவர் முன்னே றினாலும் அவர் பரிசீலிக்கப்படமாட் டார். இவர்களின் இந்தக் கொள்கை நாட்டை எங்கே கொண்டுபோய் விடும்?  இதைப்பற்றிப் பேசுவதற்கு எனக்கு வெட்கமாக இருக்கிறது. இது கூட்டுறவு கூட்டாட்சி அல்ல; வலுக்கட்டாய கூட்டாட்சி இங்கே எல்லாமே ஒரே தேசம்தான்.  அது ‘கூட்டுறவு கூட்டாட்சி’ (‘coope rative federalism’) அல்ல. மாறாக அது ‘வலுக்கட்டாய கூட்டாட்சி’ (‘coercive federalism’) அல்லது ’கூட்டுக் களவா ணிகளுடன் கூட்டாட்சி’ (‘crony fede ralism’) ஆகும். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்கு தண்டனை 2011 வரையிலும், 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, நாங்கள் 3.875 விழுக்காடு நிதிப்பகிர்வை பெற்று வந்தோம்.

அது இப்போது வெறும் 1.925 விழுக்காடாகக் குறைந்துவிட்டது.  ஏனெனில் நாங்கள் மக்கள்தொகையைக் கட்டுப் படுத்தியுள்ளோம். இதற்காக கேரளா தண்டிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு எல்லா இடங்களிலும் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. (குறுக்கீடு) தமிழ்நாடும் தண்டிக்கப்பட்டிருக்கிறது. எனினும் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக இல்லை. இந்த நாடு செழிப்புடன் இருக்க வேண்டும் என்று உண்மையிலேயே நீங்கள் விரும்பினால், நெகிழ்வுத் தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள். கூட்டாட்சிக் கொள்கைகளை நிலை நிறுத்துங்கள். அனைத்து மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகளை யும் அங்கீகரியுங்கள், அவர்களின் நியாயமான அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்ற உறுதி செய்திடுங்கள்.இவ்வாறு முனைவர் ஜான் பிரிட்டாஸ் பேசினார்.