tamilnadu

img

ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு ஆக.1- இடதுசாரிக் கட்சிகள் மறியல்!

கே. பாலகிருஷ்ணன், இரா. முத்தரசன், பழ. ஆசைத்தம்பி 

உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், பெருகி வரும் வேலையின்மை  உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை  ஒன்றிய அரசின் பட்ஜெட் புறக்கணித்துள்ளது.

சென்னை, ஜூலை 26 - தமிழ்நாட்டைப் புறக்கணித்தும், ஏழை - எளிய மக்கள் மீது கொடூர மான புதிய வரிகளை விதித்தும், அதேநேரம் முதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளித் தரும் வகை யில் ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டைக் கண்டித்து, இடதுசாரிக் கட்சிகள் மறி யல் போராட்டத்தை அறிவித்துள்ளன. ஆகஸ்ட் 1 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலு வலகங்கள் முன்பு நடைபெறும் இந்த மறியல் போராட்டத்திற்கு ஜன நாயக மதச்சார்பற்ற சக்திகள் உட்பட அனைத்து தரப்பு பொது மக்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென்றும் இடதுசாரி கட்சி கள் அறைகூவல் விடுத்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் இரா. முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தில் மோடி அரசு சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கையில் தனது ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கட்சிகளை மட்டும் திருப்திப்படுத்தி, தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சித் துள்ளது.  தமிழகத்திற்கு வரவேண்டிய புயல், மழை வெள்ள நிவாரணம், மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட  திட்டங்களுக்கான எந்த நிதியும் ஒதுக்காமல் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட இடம்பெறச்செய்யா மல் தமிழக மக்களை ஒன்றிய அரசு ஏமாற்றியுள்ளது. அதிகமான வரி வருவாய் அளிக்கும் தமிழ்நாட்டை புறக்கணிப்பதன் மூலம் இந்த நிதிநிலை அறிக்கை கூட்டாட்சி கோட்பாட்டுக்கு துரோகம் இழைக்கிறது.

உணவு மானியத்தை சுருக்கி, உர மானியத்தை வெட்டி, விவ சாயிகள் மற்றும் வறுமையில் வாடும் கோடானு கோடி மக்களின் வயிற்றி லடித்துள்ளது. உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், பெருகி வரும் வேலையின்மை உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை புறக்கணித்துள்ளது. மக்கள்நலத் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீட்டை வெட்டிக் குறைத்துள்ளது. இந்திய நாட்டில் ஏழை, பணக்காரர் ஏற்றத்தாழ்வுகள் அதி கரித்துள்ள நிலையில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு செல்வ வரி விதிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை புறந்தள்ளி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையை வாரி வழங்கி ஏழை, நடுத்தர மக்களை ஏமாற்றி யுள்ளது. நெருக்கடியில் திகழும் சிறு-குறு தொழில்களை பாது காக்க நிவாரணம் ஏதும் இல்லை. இந்நிலையில், கார்ப்பரேட் வகுப்புவாத கொள்கைகளை மூர்க்கத்தனமாக அமலாக்கிடும் இந்த நிதி நிலை அறிக்கையை எதிர்த்து, அனைத்துத் தரப்பு மக்களும் கண்டனக் குரல் எழுப்பிட வேண்டுகிறோம். ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விராத பட்ஜெட்டையும், தமிழக  விரோதப்போக்கையும் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) லிப ரேசன் ஆகிய இடதுசாரி கட்சி களின் சார்பில் 2024 ஆகஸ்ட் 1 அன்று  தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்கேற்கும் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும். இந்த தேசபக்த போராட்டத்திற்கு ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளும், அனைத்து தரப்பு பொதுமக்களும் பேராதரவு நல்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.