எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதி 18 சதவீதம் உயர்வு
சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில் சனிக்கிழமை நடந்த விவாதத்தின் போது பேசிய உறுப்பினர்கள் பலரும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை மேலும் உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, புதிய அறி விப்பு ஒன்றை வெளியிட்ட முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், “இங்கு பேசிய உறுப்பினர்கள் மட்டுமல்ல, மேலும் பல உறுப் பினர்களும் என்னிடம் இது குறித்து மனுக்கள் மூலமாக வும் கோரிக்கை வைத்திருக் கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் களின் தொகுதி மேம்பாட்டு நிதி யைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் அதிக நிதி ஒதுக் கீடு செய்கிறோம் என்பது குறிப் பிடத்தக்கது. அதாவது, ஒரு தொகுதிக்கு ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மக்கள் நலப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, இந்தத் தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து மேற் கொள்ளப்படும் பணிகளின் மீது விதிக்கப்படும் 18 சதவீத வரித் தொகையும் இந்த நிதி யில் இருந்தே கட்டப்படுவ தால், தொகுதி நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் பணிகள் பாதிக்கப்படுவதாக பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். இவற்றை கருத்தில் கொண்டு, இதுகுறித்து ஆராய்ந்து வரி செலுத்துவதால் தொகுதி மேம் பாட்டுப் பணிகள் பாதிக்கப்படா மல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த 18 சதவீத வரித் தொகையை தமிழ்நாடு அரசே ஏற்கும்” என்றார்.