நத்தம், ,ஜுன் 5- மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நலிவடைந்த 97 நாடக கலைஞர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை எம்.எல்.ஏ ஆண்டி அம்பலம் வழங்கினார். இதில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கந்தசாமி, ஒன்றிய துணை செயலாளர் குப்புச்சாமி, இலக்கிய அணி செயலாளர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.