tamilnadu

img

உக்ரைனில் படித்த மாணவர்கள் நலனை பாதுகாப்போம்

சென்னை,ஏப்.8- உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு தேவையான அத்தனை உதவி களையும் தமிழக அரசு  மேற் கொள்ளும் என்று சட்டப்பேர வையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். உக்ரைன் போரால் அங்கு படித்த தமிழக மருத்துவ மாண வர்களின் எதிர்கால நலன் குறித்து சட்டப்பேரவையில் வெள்ளிக் கிழமை (ஏப்.8) சிறப்பு கவன  ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  இதன் மீது நடந்த விவாதத்தில்  கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை மாலி,“ உக்ரைன் நாட்டிற் கும் ரஷ்ய நாட்டிற்கும் நடை பெறும் யுத்தம், உலகத்தில் அமை தியை விரும்புகிற மக்கள் அனை வரும் கவலைப்படுகிற யுத்தமாக  மாறியிருக்கிறது” என்றார். இந்த யுத்தத்தினால் உக்ரை னில் படித்துக்கொண்டிருந்து தமிழ்நாட்டு மாணவர்கள் பரித வித்தனர். இந்த நிலையை அறிந்த நமது முதல்வர்,  நாடாளு மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை தில்லிக்கு  அனுப்பி வைத்து மாணவர்களை  பாதுகாப்பாக அழைத்து வந்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி பாராட்டுகிறது

என்றும் கூறினார். தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட அந்த மாணவர்கள் மருத்துவக் கல்வியை தொடர முடியுமா?  அடுத்து என்ன செய் வது? எங்கே செல்வது? என்று திசையறியாமல் ஏக்க பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவக் கல்வி தடைபெறாமல் இருப்ப தற்கு முதலமைச்சர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க  வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். எழிலன் (திமுக.), அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக),  செல்வப் பெருந்தகை (காங்கி ரஸ்), ஜி.கே.மணி (பாமக), மாரி முத்து (சிபிஐ), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), வேல் முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோரும் பேசினர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசுகையில், “உக்ரைன் நாட்டில் போரால் சிக்கித் தவித்த 1890 மாணவர் களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமை நமது முத லமைச்சரை சாரும்” என்றார்.

மாணவர்களின் கல்வி  எந்த வகையிலும் பாதிக்கப் படக்கூடாது. அவர்களின் கல்வி  தொடருவதற்காக ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்  எழுதியதையும் பிரதமரை  சந்தித்தபோது வலியுறுத்திய தையும் மாணவர்களின் மனநிலையை தெரிந்து கொள்ள 20 மனநல ஆலோசகர்கள் மூலம் கவுன்சிலிங்கும் கொடுத்த தையும் அப்போது, எங்கெல்லாம் மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு இருக்கிறதோ அங்கு படிக்க ஒன்றிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் தெரி விக்கப்பட்டதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ருமேனியா, ஹங்கேரி, கஜகஸ்தான், செக்குடியரசு, போலந்து போன்ற நாடுகளில் மாணவர்களின் மருத்துவ படிப்பை தொடர ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்களும் வருகிறது. எனவே உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாண வர்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் தமிழக  அரசு மேற்கொள்ளும். அவர்க ளின் எதிர்கால நலனை அரசு காக்கும் என்றும் அமைச்சர் சுப்பிர மணியன் தெரிவித்தார்.