tamilnadu

img

புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

பெரம்பலூர், மே 10-  பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னம், மூங்கில்பாடி, கொளப்பாடி, புதுவேட்டக்குடி, காடூர், ஓலைப்பாடி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், ரூ.1.52 கோடி மதிப்பிலான 10 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.  இதையடுத்து, அமைச்சர் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், அரசின் திட்டங்கள் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, தொடங்கி வைக்கப்பட்ட அனைத்து பணிகளும் குறித்த காலத்திற்குள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்வுகளில் அட்மா தலைவர்கள் ஜெகதீசன், ராஜேந்திரன் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மரு. கருணாநிதி, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.