tamilnadu

img

சிந்தனையைச் சட்டமாக்கி மக்களுக்கு வாழ்வளித்தவர் கலைஞர் நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

சிந்தனையைச் சட்டமாக்கி  மக்களுக்கு வாழ்வளித்தவர் கலைஞர் நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

தஞ்சாவூர், ஜூன் 8- சிந்தித்து எழுதியதை, ஆட்சி அதி காரத்துக்கு வந்த பிறகு, அதைச்  சட்டமாக்கி, மக்களுக்கு வாழ்வளித்த வர் முன்னாள் முதல்வர் கலைஞர் கரு ணாநிதி என உயர் கல்வித் துறை  அமைச்சர் கோவி.செழியன் தெரிவித் தார்.  தஞ்சாவூரில் பச்சையப்பன் கல்லூரி  தமிழ்த் துறை முன்னாள் தலைவரும், தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு  உறுப்பினருமான முனைவர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர் தொகுத்து பதிப்பித்த, ‘கலைஞர் ஒரு முத்தமிழ்ப் பல்கலைக்கழகம்’ என்ற நூலை வெளியிட்ட அவர் மேலும் பேசிய தாவது: கருணாநிதி எழுதும்போது உரு வான சிந்தனையைத் திரைப்பட மாக்கினார். கால ஓட்டச் சூழ்நிலையில்  அரசியலில் வெற்றி பெற்று முதல்வ ராகிறார். அதன் பிறகு அன்றைக்கு எழுதிய அதே தாக்கம், அவரது உள்ளத் தில் இருந்ததால், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டத்தை ஆட்சி அதி காரத்துக்கு வந்த பின்னர் செயல்படுத்தி னார். நினைத்ததை எழுதுவது, அதைச்  சட்டமாக்கி, மக்களுக்கு வாழ்வளிப்பது  என்ற கொள்கையை கருணாநிதி கடைப் பிடித்தார். இதுபோல, இந்தியாவில் வேறெந்த தலைவரையும் அடையா ளம் காட்ட முடியாது. அப்படிப்பட்ட ஆளுமைமிக்க தலை வரைப் பற்றி நூலாசிரியர் தொகுத்து வழங்கியுள்ளார். நாம் மனிதனாக வாழவும், உணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்கான அடையாளம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. பெரி யாரின் கொள்கைகள், அண்ணாவின் சித்தாந்தங்கள், கருணாநிதியின் தத்து வங்களைத் தொகுத்து வழங்குவ தற்கான பெரு முயற்சியாக இந்நூல் உள்ளது” என்றார் அமைச்சர். இந்நூலை திருஞானசம்பந்தர் அறக்கட்டளைச் செயலர் எம்.ஜெய் லானி பெற்றுக் கொண்டார். சட்டப்பே ரவை உறுப்பினர்கள் துரை. சந்திர சேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர்  சண். ராமநாதன், தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிவாளர் (பொ) கோ. பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து ரையாற்றினர். நூலாசிரியர் வா.மு.சே.  முத்துராமலிங்க ஆண்டவர் ஏற்பு ரையாற்றினார். முன்னதாக, திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்க நிர்வாகி பெரி.கபிலன்  வரவேற்றார். எழுத்தாளர் சா.அடைக் கலம் நன்றி கூறினார்.