tamilnadu

img

கொப்பரை தேங்காய் கொள்முதல் காலம் நீட்டிப்பு: அமைச்சர்

சென்னை,அக்.11- கொப்பரை தேங்காய் கொள்முதல் காலத்தை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேர வையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் 4.58 லட்சம் ஏக்கர் பரப்பில் தென்னை சாகுபடி மேற் கொள்ளப்பட்டு சுமார் 3.34 லட்சம் மெட்ரிக் டன்  கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது.கொப்பரையின் சந்தை விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட  குறையும்போது தென்னை  விவசாயிகளின் நலனுக்காக  தமிழ்நாட்டில் ஒன்றிய அர சின் விலை ஆதரவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி அரவை கொப்பரை கிலோ ரூ.108.60 என்ற வீதத்தில், பந்து கொப்பரை கிலோ ரூ.117.50 என்ற வீதத்திலும் தேசிய வேளாண்மை கூட்டுறவு இணையத்திற்காக (என்.ஏ. எப்.இ.டி.) குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கொள்முதல் செய்யப் படுகிறது.

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் 1.4.2023 முதல் 30.9.2023 வரையிலான கால கட்டத்தில் 37,638 விவசாயி களிடமிருந்து ரூ.597.225 கோடி மதிப்பிலான 54,993  மெ. டன் அரவை கொப்பரை  கொள்முதல் செய்யப்பட் டுள்ளது. வெளிச்சந்தையில் கொப்பரை விலை தொடர்ந்து சரிந்து வரு வதால், விவசாயிகளிட மிருந்து கொப்பரை கொள் முதலுக்கான கால அளவை நீட்டிக்க வேண்டிய தொடர் கோரிக்கை வர பெற்றதைத் தொடர்ந்து, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியப்  பிரதமரை கேட்டுக் கொண்டதற்கு இணங்க,  கொப்பரை கொள்முத லுக்கான இலக்கு 56 ஆயிரம் மெட்ரிக் டன்னிலிருந்து 90 ஆயிரம் மெட்ரிக் டன்னாக (அதாவது கூடுதலாக 34,000 மெ.டன்) உயர்த்தப்பட்டது டன் கொள்முதல் செய்யும் கால அளவும் 26.11.2023 வரை ஒன்றிய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசாணையும் 6.10.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தென்னை அதிகம் சாகுபடி  செய்யப்படும் 24 மாவட்டங்க ளில் உள்ள 75 ஒழுங்கு முறை விற்பனை கூடங்க ளில் விவசாயிகள் தங்களது கொப்பரை தேங்காய் விற்பனை செய்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.