tamilnadu

img

தமிழகத்தில் முதன்முறையாக ஊரகப் பகுதியில் வகுப்பறையுடன் கூடிய “ஸ்மார்ட் அங்கன்வாடி மையம்” திறப்பு

தஞ்சாவூர், மார்ச் 7 - தமிழகத்திலேயே ஊரகப் பகுதியில் முதன்முறையாக வகுப்பறையுடன் கூடிய ஸ்மார்ட் அங்கன்வாடி மையத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் மேற்கு ஊராட்சியில் தோழகிரிப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த 47 குழந்தை கள் தினமும் அங்கன்வாடி மையத்துக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ்  ரூ.12.40 லட்சம் செலவில் மூன்று வகுப்பறை யுடன் கூடிய புதிய ஸ்மார்ட் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதில் தனியார்  நர்சரி பள்ளிகளில் உள்ளது போன்று, குழந்தைகளுக்கான செயல் வழி கற்றல் திறனை அதிகரிக்க தேவையான பொம்மை கள், தமிழ் - ஆங்கில எழுத்துக்கள், பழங்கள், காய்கறிகள் ஆகிய படங்களுடன் கூடிய பொருட்கள் உள்ளன. மேலும் ப்ரொஜக்டர் அமைக்கப்பட்டு அதில் கதை கள், பாட்டுகள், குழந்தைகளின் உச்சரிப்பு களை மேம்படுத்தும் பயிற்சிகள் ஆகியவை ஒளிபரப்பப்படும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

ஆரம்பப் பள்ளியில் புதிய நூலகம்

அதே போல் தோழகிரிப்பட்டியில் உள்ள  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை  116 மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். இந்த பள்ளி மாணவர்கள் பயன் படுத்தும் வகையில் தனி கட்டிடத்தில் ஆயிரம் புத்தகங்கள் கொண்ட “அகரம் நூலகம்” என்ற புதிய நூலகம் ரூ.3.22 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தோழகிரிப்பட்டியில் உள்ள ஸ்மார்ட் அங்கன்வாடி மையம் மற்றும்  அகர நூலகத்தை திங்கள்கிழமை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன் (திரு வையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சா வூர்) மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகை யில், தமிழகத்திலேயே தஞ்சாவூர் மாவட்டத் தில் ஊரகப்பகுதியில், முதன்முறையாக மாவட்ட ஆட்சியர் மிகுந்த அக்கறையோடு ஸ்மார்ட் அங்கன்வாடி மையத்தை உரு வாக்கியுள்ளார். இதனை உருவாக்க முயற்சி கள் மேற்கொண்ட அனைத்து அதிகாரிகளை யும் பாராட்டுகிறேன்.  இதேபோல் பிற மாவட்டங்களிலும் உருவாக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மார்ச் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு பள்ளி களில் உள்ள நூலகங்களை மேம்படுத்தி மாணவர்கள் வாசிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.