tamilnadu

img

லக்கிம்பூர்கெரி விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை வழக்கில் அமைச்சரின் மகனுக்கு ஜாமீன்

லக்கிம்பூர் கெரி விவசாயிகள் மீது காரை ஏற்றிப்  படுகொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட முன்னாள் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா  உள்ளிட்ட 12 பேருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம்  ஜாமீன் வழங்கியுள்ளது. 2021 ஆம் ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்த விவசாய விரோதச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவ தும் போராட்டம் நடந்து வந்தது. உ.பி மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கெரி யில் விவசாயிகள் நடத்திய போராட்டத் தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் காரை விவ சாயிகள் கூட்டத்திற்குள் ஓட்டி பயங்கர மான தாக்குதலை நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 2 விவசாயிகள் உயிரிழந்தனர். மருத்துவமனையில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 4 விவசாயிகள், 1 பத்திரிகையாளர் உட்பட 8 பேர் பலி யாகியது குறிப்பிடத்தக்கது.  முக்கிய குற்றவாளியான  மிஸ்ரா ஏற்கனவே இந்த வழக்கில் ஜாமீனில் உள்ளார்.  அவரது கூட்டாளிகளுக்கும்   கடந்த ஆண்டு வெவ்வேறு தேதிகளில் அலகாபாத் உயர்நீதிமன்றம் இடைக் கால ஜாமீன் வழங்கியிருந்தது. இந் நிலையில் தற்போது அனைவருக்கும் வழக்கமான ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.