மதுரை, மே 13- புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதில் தமி ழக அரசு மெத்தனமாக இருப்பதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:- மதுரையில் பீகார், இராஜஸ்தான், மத்தி யப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநி லங்களைச் சேர்ந்த சுமார் 16 ஆயிரம் தொழி லாளர்கள் உள்ளார்கள். அவர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கு தயாராக உள்ளனர். ஆனால் தமிழக அரசு குழப்பம் செய்து கொண்டிருக்கிறது. இவர்களின் ரயில் கட்டணத்தை அரசு ஏற்க மறுத்து வரு கிறது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி நாங்கள் ஒரு கோடி ரூபாய் நிதி தருகிறோம் அதை மாநில அரசு ஏற் றுக்கொண்டு வெளிமாநிலத் தொழிலா ளர்களைப் அனுப்பி வைக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.
ஆனால் தமிழக தலைமைச் செயலாளர் அந்த நிதியை வேண்டாமென்று கூறிவிட்டதோடு நாங்கள் சமாளித்துக் கொள்வோம் என்று கூறுகிறார். இந்தச் சூழலில் மதுரை ஆட்சியர் அவர் களை அரசு நிதியிலிருந்து அனுப்பி வைக்க முடியுமா? அதற்கான உத்தரவு வந்துள்ளதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கொரோனா போன்ற நெருக்கடியான காலத்தில் மத்திய - மாநில அரசுகள் புலம் பெயர் தொழிலாளர்களை வஞ்சிக்கின்ற னர். அவர்கள் தங்களுடைய சொந்த மாநி லங்களுக்கு செல்வதற்கு போதுமான நிதி யை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். பி.எம்.கேர் நிதியை மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. ஊரடங்கு தொடரும் நிலையில் மத்திய அரசு தம்முடைய பங்களிப்பை அறிவிக்க மறுத்து வருகிறது. 45 நாட்களாக அனைத்து தொழில்களும் பெரும் நெருக்கடி யைச் சந்தித்துள்ளன. இவர்களின் பிரச்ச னைகளை கேட்க மத்திய அரசு மறுக்கிறது என்றார்.