சென்னை, பிப். 10 - காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தை முற்றுகையிட்டு, மருத்துவ ஆய்வக நுட்பநர்கள் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் ஆய்வக நுட்பநர் பட்டயப் படிப்பு முடித்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். ஆனாலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வக நுட்பனர்கள் (நிலை-2) பணி யிடங்களை அரசு பல ஆண்டுகளாக நிரப்பா மல் உள்ளது. எனவே, காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், அரசாணை 262ஐ (விகிதாச்சார பணி உயர்வு ஆணை) ரத்து செய்ய வேண்டும். அரசாணை 401 யை ரத்து செய்து எழுத்து தேர்வு முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும். எழுத்து தேர்வு வைத்து சமவாய்ப்பு முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைப்படி சுழற்சி முறையில் நோ யாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ ஆய்வக நுட்ப நர்களை நியமிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவ ஆய்வக நுட்பநர் கவுன்சில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆய்வக நுட்ப நர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையிலேயே, இரண்டாண்டு மருத்துவ ஆய்வக நுட்ப வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் கூட்ட மைப்பும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பட்டயப்படிப்பு நகல்களை கிழித்தெறிந்து முழக்கமிட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண் மயங்கி விழுந் தார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரை யும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.