புதுதில்லி, ஏப்.11- இணைய வழி நடைபெறு கின்ற நிதி மோசடிக் குற்றங் களைக் கட்டுப்படுத்திட, அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்துவருவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டி ருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற போது, கேள்வி நேரத்தின் போது, பி.ஆர். நடராஜன், பன்னாட்டு இணைய பாது காப்பு மற்றும் நிதிக்குற்றங் களின் பிரச்சனைகள் சம் பந்தமாக வெளியுறவுத் துறை நிலைக்குழுவால் ஏற்படுத் தப்பட்ட பரிந்துரைகளின் விபரங்கள் என்ன என்றும், இந்தியாவில் இதுபோன்ற இணைய நிதிக்குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு அர சால் எடுக்கப்பட்ட/ எடுக்கப் படுகின்ற நடவடிக்கைகள் என்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய வெளி யுறவு துறை இணையமைச் சர் மீனாட்சி லேகி, பன்னாட்டு இணைய பாதுகாப்பு மற்றும் நிதிக்குற்றங்களின் பிரச்ச னைகள் மீது, வெளியுறவுத் துறையின் மீதான நிலைக் குழுவின் பரிந்துரைகள், 21-12-2022 அன்று மாநிலங்க ளவை மற்றும் மக்களவை யில் வைக்கப்பட்ட, 17ஆவது மக்களவையின் 18ஆவது அறிக்கையின் ஒரு பகுதியே ஆகும் என்றும்; தகவல்க ளைப் பாதுகாத்தல், இணைய மின்வெளி கட்டமைப்பு,
இணைய அச்சுறுத்தல்களை தடுத்தல் மற்றும் எதிர்வினை யாற்றுதலுக்கான திறன் களை கட்டமைத்தல், இணைய சம்பவங்களிலிருந்து ஏற் படும் அழிவுகளை குறைத் தல் மற்றும் பாதிப்புகளை குறைத்தல் ஆகியவற்றை நோக்கி, நிறுவன அமைப்பு கள், மக்கள், முறைகள், தொழில் நுட்பங்கள் ஆகிய இவைகள் மூலமும் பன்னாட்டு ஒத் துழைப்போடும் கூடி அரசு செயல்படுகிறது என்றும்; பல்வேறு இணைய பாது காப்பு அச்சுறுத்தல்கள் பற்றி அறிவார்ந்தும் விழிப்பு ணர்வோடும் அரசு உள்ளது என்றும்; இணைய மின்வெளி யில் பாதிப்புகளை தணிக்க, தேவையான நடவடிக்கை களை இணைய பாதுகாப்பு டன் சம்பந்தப்பட்ட நிறுவனங் கள் காலமுறையில் மேற் கொண்டுள்ளன என்றும்; பன் னாட்டு ஒத்துழைப்பில் இணையத்துடன் தொடர்பு டைய பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்தும் குறிக் கோளுடன் செயல்பட இணைய இராஜதந்திர பிரிவு ஒன்றை அமைச்சகம் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார். (ந.நி)