tamilnadu

மே 20 - தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு

மே 20 - தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக   நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 24வது மாநாடு, மோடி தலைமையிலான பாஜக-தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை (லேபர் கோட்ஸ்) அமல்படுத்துவதற்கு எதிராக, மத்திய தொழிற்சங்க கூட்டமைப்புகள் மற்றும் சுயேச்சை அகில இந்திய துறைசார் கூட்டமைப்புகளால் மே 20, 2025 அன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு தனது முழு மற்றும் செயல்பூர்வமான ஆதரவை வழங்குகிறது. தொழிலாளர் சட்டங்களின் நோக்கம் ‘தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள்’ என்ற பெய ரில், தற்போதுள்ள 29 தொழிலாளர் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு களில் இணைக்கப்பட்டதாக கூறப்படுவது, மோடி அரசால் தீவிரமாக பின்பற்றப்படும் நவதாராளவாத நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்.

இவை, வேலை நேரம், குறைந்தபட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு போன்ற வேலை நிலைமைகள் தொடர்பான மற்றும் முக்கியமாக சங்கம் அமைக்கும் உரிமை மற்றும் கூட்டுப் பேர உரிமை உள்ளிட்ட வேலை நிறுத்த உரிமை போன்ற தொழிலாளர் வர்க்கத்தின் - கடுமையாக போராடி பெற்ற அடிப்படை உரிமை களை வெட்டிக் குறைக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளன. உண்மை நிலைமை அனைவரையும் உள்ளடக்கி, தொழிலாளர் சட்டங்களை எளிமைப்படுத்துவதற்காக என்ற மோடி அரசின் கூற்றுக்கு மாறாக, தற்போதுள்ள தொழி லாளர் சட்டங்களின் கீழ் முன்பு பாதுகாப்பு நடவடிக் கைகளுக்கு உட்பட்டிருந்த முறைசார் துறையில் உள்ளவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களை தொழிலாளர் சட்டத் தொகுப்பு கள் விலக்குகின்றன. சமூக பாதுகாப்பு குறியீடு,  இபிஎஃப் மற்றும் இஎஸ்ஐ போன்ற சமூக பாது காப்பு பலன்களில் மாற்றங்கள் செய்யவும், பல வீனப்படுத்தவும் மற்றும் சம்பந்தப்பட்ட சட்டங்க ளில் நாடாளுமன்ற திருத்தம் இல்லாமலேயே நிறுவனங்கள் இந்த திட்டங்களிலிருந்து வெளி யேறவும் வழிவகை செய்கிறது.

பாதிக்கப்படும் தொழிலாளர்கள் பீடி, இரும்புத் தாது, மைக்கா, சுண்ணாம்புக் கல், டோலமைட் சுரங்கங்கள் போன்ற தொழில்க ளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்க ளுக்கான சமூக பாதுகாப்பு, இவர்களில் பெரும்பா லோர் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர், துறை சார்ந்த குறிப்பிட்ட சட்டங்களால் முன்பு உள்ளடக்கப்பட்டிருந்தனர்; ஆனால் இப்போது அரசு செஸ் வசூலிப்பதற்கான அனைத்து தொடர்புடைய விதிகளையும் ரத்து செய்த தால் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள் கூடுதலாக, யுஏபிஏ, பிஎம்எல்ஏ மற்றும் பிஎன் எஸ் போன்ற சட்டங்களின் கீழ் உள்ள விதிகளை மோடி அரசு தொழிலாளர்களின் அடிப்படை உரிமை களை அடக்குவதற்கு பயன்படுத்துகிறது. புகார் அளிப்பது அல்லது தொழிலாளர் துறையில் முறை யீடு செய்வது போன்ற கூட்டு நடவடிக்கைகள் பிஎன் எஸ் சட்டப்பிரிவு 111ன் கீழ் ‘முறையான குற்றம்’ என பொ ருள்கொள்ளப்பட்டு, தொழிற்சங்க தலைவர்கள் ஜாமீன் இல்லாமல் சிறையில் அடைக்கப்படுகின்ற னர். அதே நேரத்தில், ஜன் விஸ்வாஸ் சட்டத்தின் மூலம், அரசு 41 சட்டங்களின் கீழ் 180 குற்றங்களை குற்றமற்றதாக்கி, மீறல்களுக்கான சிறைத் தண்டனை விதிகளை விலக்கி, தண்டனையை அப ராதங்கள் அளவிற்கு குறைத்துள்ளது. கடைசி மத்திய பட்ஜெட்டில், மேலும் 100 விதிகளை குற்ற மற்றதாக்க முன்மொழியப்பட்டது.

உண்மையான நோக்கம் ‘எளிதாக வணிகம் செய்தல்’ (ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்) என்ற பெயரில் அமல்படுத்தப்படும் தொ ழிலாளர் சட்டத் தொகுப்புகள் மற்றும் அனைத்து நடவடிக்கைகளும், தொழிற்சங்கங்கள், தொழி லாளர் வர்க்கத்தின் முறையான வலிமையை பல வீனப்படுத்தி, தொழிலாளர்கள் மீது அடிமைத்தன நிலைமைகளை திணித்து, உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு பெரு நிறுவனங்களால் கட்டுப்பாடற்ற சுரண்டலை மேற்கொள்ள உதவும் முயற்சிகளே தவிர வேறில்லை.

எதிர்ப்பு நடவடிக்கைகள் நவதாராளவாதம் தொடங்கிய காலத்திலிருந்து முதலாளித்துவ வர்க்கத்திற்கு சாதகமாக தொழிலா ளர் சட்டங்களை திருத்தும் முயற்சிகள் தீவிரமடைந் துள்ளன. மோடி அரசு 2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனேயே குறியீடாக்கல் (கோடிபிகேஷன்) செயல்முறையை தொடங்கி, 2019-20ல் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை நிறைவேற்றி யது. ஆனால் இதுவரை தொழிலாளர் சட்டத் தொ குப்புகளை அமல்படுத்த முடியவில்லை, இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, ஒன்றுபட்ட தொழிலா ளர் வர்க்க இயக்கத்தின் கடுமையான எதிர்ப்பாகும். அறைகூவல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின்  24வது மாநாடு, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்யக் கோரும் தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு முழு ஆதரவை வழங்கு கிறது; மேலும் மே 20, 2025 அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு செயலில் ஆதரவு அளிக்குமாறு தனது அனைத்து கமிட்டிகள் மற்றும் கிளைகளை அழைக்கிறது.

ஆர்எஸ்எஸ்-பாஜக மற்றும் சங்பரிவாரின்  கொடூரமான மதவெறித் தாக்குதல்களை எதிர்கொள்வோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 24வது மாநாடு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ்-பாஜக மற்றும் சங்பரிவாரால் தீவிரப்படுத்தப்பட்ட மதவெறித் தாக்குதல்களை கண்டிக்கிறது. இவை சமூகத்தை மதவெறுப்பின் அடிப்படையில் பிளவுபடுத்தி, அணி திரட்டும் இடைவிடாத பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். பெரும்பான்மை சமூகத்திடையே தனது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கான ஆதரவை தக்கவைத்து வலுப்படுத்துவதற்கும், மத்தியில் உள்ள பாஜக அரசாங்கமும், மாநிலங்களில் உள்ள பாஜக அரசாங்கங்களும் அடையும் தோல்வி களால் வளர்ந்து வரும் அதிருப்தியை சமாளிப்ப தற்கும் இதுவே ஒரே வழி என்று சங்பரிவார் கையாளுகிறது. தற்போதைய நிலைமை எனவே, நாம் முன்பு பயன்படுத்தப்பட்டவற்று டன் புதிய பிரச்சனைகளை எழுப்பும் மதரீதியான அணி திரட்டலுக்கான மதவெறிப் பிரச்சாரங்களின் தொடர்ச்சியை பார்க்கிறோம். ராம நவமி மற்றும் அனுமான் ஜெயந்தி போன்ற இந்து விழாக்களை, முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் மசூதிகளுக்கு அருகிலும் தாக்குதல்களாக முடிக்கும் பயன்பாடு அதிகரித்துள்ளது.

ரம்ஜான் மாதத்தில் வெள்ளிக்கிழ மையில் வரும் ஹோலியானது, முஸ்லிம்களை இலக்கு வைத்த அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்கு தல் நடவடிக்கைகளில் உச்சத்தைக் கண்டது. குழந்தைகள் மீதான தாக்குதல் சமீபத்திய தாக்குதல்களின் மிகவும் கவ லைக்குரிய அம்சம் என்னவென்றால், குழந்தை கள் கூட விட்டுவைக்கப்படவில்லை என்பதுதான். சமீபத்தில் ராஜஸ்தானின் ஆல்வாரில் ஒரு மாதப் பெண் குழந்தை காவலர்களால் மிதித்துக் கொல்லப்பட்டது; மகாராஷ்டிராவின் மால்வானில் 15 வயது சிறுவன், பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பியதாக அற்பமான மற்றும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். வரலாற்றை திரிப்பதற்கான திரைப்படங்கள் வரலாற்றை திரிப்பதற்கும், முஸ்லிம்களுக்கு எதிரான முன்னுதாரணங்களையும் வெறுப்பையும் அதிகரிப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட திரைப்படங் கள் பாஜக அரசுகளால் ஊக்குவிக்கப்படுகின்றன. சமீபத்தியது “சாவா” என்ற படம்; ஔரங்கசீப்பை கொடூரமாக சித்தரித்து, அதன் மூலம், அவரது சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் அவதூறு செய்தது.

மகாராஷ்டிராவின் பாஜக அமைச்சர்கள், எப்போதும் மிகவும் இயல்பான தன்மையில் இருந்த சந்தைகள் மற்றும் யாத்திரை களில் இருந்து முஸ்லிம்களை விலக்குவதை ஊக்குவிக்க இதைப் பயன்படுத்தினர். நாக்பூரில் ஏற்பட்ட மோதல்கள் இந்த பிரச்சாரத்தின் விளை வாகும், இதில் பல முஸ்லிம்கள் கைது செய்யப்பட்ட னர் மற்றும் ஒரு முஸ்லிம் தலைவரின் வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டது.

மசூதிகள் மீதான தாக்குதல்கள் சமீபத்திய காலத்தில், ஆர்எஸ்எஸ் உறுப்பினர்க ளும் அவர்களின் தொண்டர்களும், கோவில்களை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக கூறி, மசூதிகளை இடிக்க நீதிமன்றங்களை நிர்ப்பந்திப்பதற்கான முயற்சிகளை மீண்டும் மீண்டும் மேற்கொண்டதை யும் நாம் பார்த்தோம்.

மிகவும் துரதிருஷ்டவசமாக, பல கீழமை நீதிமன்றங்களும், முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அவர்களும் தங்கள் கருத்துக்கள் மற்றும் உத்தரவுகளுடன் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினர். இது பல இடங்களில் மதவாத அணி திரட்டலுக்கும்,  சம்பலில் ஐந்து இளம் முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சோகமான சம்பவங்களுக்கும் வழிவகுத்தது. இப்போது சம்பலில் லட்சக்கணக்கான மக்கள், முஸ்லிம்களை விட அதிகமான இந்துக்கள், நூற்றாண்டுகளாக பங்கேற்று வந்த சந்தை கூட, தேச விரோத நபர்களின் கொண்டாட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்ற பெயரில் தடை செய்யப்பட்டுள்ளது.

இது பல சமூகங்களை ஒன்றி ணைத்த சகோதரத்துவ கொண்டாட்டங்கள் மீதான ஒரு குறிப்பிடத்தக்க தாக்குதலாகும். மத மாற்ற எதிர்ப்பு சட்டங்கள் உத்தரகண்டில் யுசிசி போன்ற புதிய சட்டங்கள், பெண்கள் மற்றும் இளம் தம்பதிகளின் உரிமைகளை தாக்கும் அதே வேளையில், முஸ்லிம் தனிநபர் சட்டங்களை முற்றிலுமாக நீக்குகின்றன; மேலும் உ.பி., குஜராத், ம.பி.,  போன்ற மாநிலங்களின் அரசுகளால் இயற்றப்பட்ட, பெண் இந்து மற்றும் ஆண் முஸ்லிமாக இருக்கும் மதங்களுக்கிடையேயான திருமணங்களை தாக்கும் மேலும் கடுமையான மதமாற்ற எதிர்ப்பு  சட்டங்களும் உள்ளன. இத்தகைய திருமணங்க ளில் ஈடுபடும் ஆண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் முன்மொழி யப்படுகிறது.

அறைகூவல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 24வது மாநாடு, சங்பரிவாரின் குரூரமான மதவாத அணிதிரட்டல் முயற்சிக்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ்ஸின் உண்மையான இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்தும் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கு எதிராகவும் வலுவான பிரச்சாரங்களை ஏற்பாடு செய்யுமாறு அனைத்து கட்சி அமைப்புகளையும் அழைக்கிறது. இந்த தாக்கு தல்களை வலிமையாக எதிர்கொள்வதற்கான பிரச்சாரங்களில் மக்களின் பரந்த பிரிவினர் மற்றும் மதச்சார்பற்ற, ஜனநாயக அமைப்புகளை ஈர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள கட்சியை அழைக்கிறது.