tamilnadu

img

மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலகம் முற்றுகை

சென்னை, நவ. 24- கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர ணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலு வலகத்தை முற்றுகையிடும் போராட்டத் தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தினர் ஈடுபட்டனர். இந்த போராட்ட த்திற்கு பல முனைகளில் இருந்து வந்த பெண்களை காவல்துறையினர் விரட்டி விரட்டி கைது செய்தனர். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி  மர்ம மரண வழக்கு விசாரணையை துரி தப்படுத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்; சிபி சிஐடி விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்; மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்; ஸ்ரீமதியின் தாயார் குறித்து முகநூலில் தவறாக சித்தரித்தவர் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கனி யாமூர் தனியார் பள்ளியில் நடந்த மாணவி யின் மரணம்  குறித்து ஆய்வு செய்து விசா ரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலு வலகத்தை வியாழனன்று (நவ. 24)  முற்றுகையிடப் போவதாக அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறி வித்திருந்தது. 

டிஜிபி அலுவலகம் முற்றுகை

இப்போராட்டத்தைத் தடுக்கும் நோக்கில், சென்னையிலும் வட மாவட்டங் களிலும் மாதர் சங்க நிர்வாகிகளை தேடித் தேடி காவல்துறையினர் கைது செய்தனர். அனைத்து கெடுபிடிகளையும் கடந்து கணிசமான பெண்கள் துணிச்சலு டன் டிஜிபி அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். ஸ்ரீமதி மரணத்தில் தொடர்புடை யவர்களை கைது செய்யக்கோரியும், விசாரணையை தாமதிக்கும் காவல் துறையை கண்டித்தும் முழக்கமிட்ட அவர்கள் அனைவரையும் காவல்துறை யினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தயாராக வைத்திருந்த வாகனத்தில் ஏற்றினர். 

உ.வாசுகி பேட்டி

சென்னை டிஜிபி அலுவலகம் நோக்கி  செல்லும் ராதாகிருஷ்ணன் சாலையில்  கல்யாணி மருத்துவமனை அருகே  மாதர்சங்கத்தின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.  இந்த போராட்டங்களில் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, துணைத் தலைவர் கே.பாலபாரதி, மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.ராதிகா, பொருளாளர் வி. பிரமிளா, மத்தியக்குழு உறுப்பினர் எஸ். கே.பொன்னுத்தாய் மற்றும் நிர்வாகிகள் எஸ்.தமிழ்ச்செல்வி, ஜி.ராணி, லீமாறோஸ், பி.கற்பகம், பி.பூமயில், லதா, மஞ்சுளா, மல்லிகா, மகாலட்சுமி, சித்ரகலா, பாக்கியலட்சுமி, தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராதாகிருஷ்ணன் சாலை போராட்டத் தின் போது, மாதர் சங்க அகில இந்திய  துணைத்தலைவர் உ.வாசுகி செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மாணவி ஸ்ரீமதியின் வழக்கை சிபிசிஐடி முறையாக கையாளவில்லை. எனவே, டிஜிபி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துகிறோம். ஆனால், இந்த போராட்டத்தை தடுக்க முற்றிலும் நெறிமுறைகளை மீறிய நட வடிக்கைகளை காவல்துறை எடுத்துள்ளது. போராட்டத்திற்கு வந்த வேன்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்; கைது செய்யப்பட்டனர். சிதம்பரத்தில் ரயில் ஏறச் சென்றவர்களை நிலையத்தி லிருந்து வெளியே தள்ளியுள்ளனர். காவல்துறையின் கெடுபிடிகளையும் மீறி  போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற் பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் உடனடியாக குற்றப்  பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். தற்கொலை, விபத்து என வழக்கை மூடி  மறைக்கக் கூடாது. விசாரணையின் முக்கிய கட்டங்களை ஸ்ரீமதியின் தாயார் செல்விக்கு காவல்துறை தகவல் தெரி விக்க வேண்டும். காவல்துறை எதற்காக ஸ்ரீமதியின் தாயார் டிஎன்ஏ-வை கேட்க வேண்டும்? வழக்கை திசைதிருப்ப ஏற்பாடு நடக்கிறது. குற்றவாளிகள் பிணையில் வந்துவிட்டார்கள். பிணை யை ரத்து செய்யக்கோரி காவல் துறையோ, தமிழக அரசோ மேல்முறை யீட்டிற்கு செல்லவில்லை. மாறாக, ஸ்ரீமதியின் தாயார்தான் மேல்முறையீடு செய்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை, ஜிப்மர் அறிக்கை, சிபிசிஐடி-யின் ஸ்டேட்டஸ் அறிக்கை போன்றவற்றை 1985 ஐ.நா.உடன்படிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தகைய அறிக்கைகளை தர வேண்டும். அதன் படி செல்வியிடம் காவல்துறை அறிக்கை களை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட வர்களை தகவல் வலையத்திற்கு வெளியே  வைத்திருப்பது சரியல்ல.

சிபிசிஐடி வாதம் தவறானது

ஸ்ரீமதி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும், 35 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும். மரணம் நடந்த முதல் 4 நாட்கள் அமைதி காத்து  தடயங்கள் அழிய காரணமாக இருந்த  உள்ளூர் காவலர்கள் மீது கிரிமினல் நட வடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தலோ, வல்லுறவோ நடக்க வில்லை என்று சிபிசிஐடி கூறுகிறது. போக்சோ பிரிவுகளின்படி பாலியல் தாக்குதல், வல்லுறவு என்பதற்கு விரி வான விளக்கம் தரப்பட்டுள்ளது. சம்பவத் திற்கு முந்தைய நாள் ‘பார்ட்டி’ நடந்துள் ளது. மதுபானங்கள் கொண்டு செல்லப் பட்டுள்ளது. விஐபி குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் இருந்துள்ளனர். ஏதோ ஒருவகையில் அந்த மாணவி யின் மீது பாலியல் துன்புறுத்தல் நடந்தி ருக்கும் என்று சந்தேகப்படுவதற்கு இடம் உள்ளது.  ஆகவே போக்சோ சட்டப்பிரிவை இணைக்க வேண்டும். நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். இந்த போராட்டத்தை தடுக்க  காவல்துறை மேற்கொண்ட முயற்சிகள்,  வழக்கை சிபிசிஐடி மூடிமறைக்க முயற்சிக்கிறது என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் தாளாளர்

முக்கிய நபரின் குடும்பத்தை சேர்ந்த மகனோ அல்லது பேரனோ இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற  சந்தேகமும் உள்ளது. வழக்கை மூடி மறைக்க அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். சாதிய காரணிகளும் உள் ளன. சக்தி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. தமிழக காவல் துறை, அதிகார வர்க்கத்தின் ஒரு பகுதி ஆர்எஸ்எஸ் அமைப்பின் மதவாத கருத்துகளுக்கு இரையாகி உள்ளது. இதன்காரணமாக ஒருபகுதி அதிகார வர்க்கம் ஆர்எஸ்எஸ்க்கு சாதகமான நிலைபாட்டை எடுக்கிறது. இந்த விவ காரத்தில்  குற்றவாளிகளை கைது செய்து,  சரியான சட்டப்பிரிவின் கீழ் வழக்கை பதிய வேண்டும். தண்டனை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர் களை கைது செய்து ராயப்பேட்டை சமூக நலக்கூடத்திலும், மயிலாப்பூர் லஸ் சமூக நலக்கூடத்திலும் காவல்துறை யினர் அடைத்தனர். லஸ் சமூக நலக் கூடத்தில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் கைது செய்யப்பட்டவர்கள் சாலையில் மீண்டும் மறியல் போராட்டம் நடத்தினர். இதன்பிறகு காவல்துறை உயர் அதிகாரிகள் சங்கத் தலைவர்களு டன் பேச்சுவார்த்தைநடத்தினர். அதன் பிறகுஒருபகுதியினரை மட்டும் விடுதலை செய்தனர்.