tamilnadu

img

பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த ஆலோசனைகள்

சென்னை,ஏப்.22-  தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துவ தற்கான ஆலோசனைகள் அடங்கிய கோ ரிக்கை மனுவை  தமிழக மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ்.குமாரியிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் அ.ராதிகா, மாநிலப் பொருளாளர் பிரமிளா ஆகியோர் வழங்கினர். சென்னை கலாசேத்ரா கல்லூரியில் நடைபெறும் மாணவிகள் மீதான பாலியல் வன்முறை வழக்கில் தொடர் தலையீடும், கண்காணிப்பும் தேவை என்பதும் மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகார் மீது உடனடி நடவடிக்கை தேவை என்பதும் வலி யுறுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவில் ஆசிரியரால் மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை வேண்டும். கடலூர் மாவட்டத்தில் மருமகள் மீது மாமியார் அமில வீச்சு நடத்தி யதையும், கோவை நீதிமன்றத்தில்  கணவன், மனைவியின் மீது அமில வீச்சு நடத்திய  வழக்குகளில் உடனடி நடவடிக்கை வேண்டும்.  அதிகாரத்தில் உள்ளவர்களின் மிரட்டுத லால் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நூறு நாள் வேலைத்திட்ட பணித்தள பொறுப்பாளர் திருமங்கலம் நாகலட்சுமி வழக்கில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவரது குடும்பத்திற்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் பெரிய கிருஷ்ணாபுரத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்ட  வழக்கில் உண்மையறிந்து பாதிக்கப்பட்ட வர்களுக்கு உரிய நியாயம் வழங்குவதற்கு கால தாமதப்படுத்தும்  ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சம்பந்தமாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வசித்து வந்த சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சுபாஷ் படுகொலை செய்யப்பட்டதும் அதனை தடுத்த  பாட்டியும் படுகொலை செய்யப்பட்டதும், கொலை வெறி தாக்குதல் நடத்தி  ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் அனுசுயா விற்கு பாதுகாப்பும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழக்குகளில்  உடனடி தலையீடு தேவை என்பதை வலி யுறுத்தி மனு கொடுக்கப்பட்டது. 

மேலும், தமிழகத்தில் சாதி ஆணவக் குற்றங்களை தடுத்து நிறுத்திட தனிச் சட்டம் வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். பெண்கள் பணி செய்யும் இடங்க ளில் உள்ளாக  புகார் கமிட்டி அமைக்கப்பட் டுள்ளதா என்பதை கண்காணித்து உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்க ளில் நடைபெறக்கூடிய பாலியல் வன்முறைக ளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.  பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை களை தடுத்து நிறுத்த அரசின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக பாலின சமத்துவத்தை வலியுறுத்தியும், பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சா ரங்களை மேற்கொள்ள வேண்டும். திரைப் படங்களில் ஆணாதிக்க கருத்துக்களை, பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் கருத்துக் களை தடுத்து நிறுத்த திரைக் கலைஞர்கள், பாடல் ஆசிரியர், இயக்குநர்கள், மகளிர் அமைப்புகள் கொண்ட சிறப்புக் கூட்டங்கள் நடத்த வேண்டும் போன்ற பல்வேறு ஆலோச னைகள் முன்வைக்கப்பட்டு மனு கொடுக்கப் பட்டது.   உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வ தாக மகளிர் ஆணையத் தலைவியும் உறுதி அளித்துள்ளார்.