மதுரை, ஏப்.13- 100 நாள் வேலைத்திட்ட பொறுப்பாளர் நாகலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் திருமங்க லத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிரா மத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவ ரது மனைவி நாகலட்சுமி.(31). இவ ருக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, பாண்டிசிவானி என 5 பெண் குழந்தைகள் உள்ளனர். 5 பெண் குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வருவதால் இவருக்கு மாவட்ட ஆட்சி யர் அனீஷ்சேகர் கருணை அடிப்ப டையில் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணி வழங்கினார். ஆனால் மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கவுன்சிலர்கள் வீரக்குமார், பாலமுருகன் மற்றும் கிளார்க் முத்து ஆகியோர் தரக் குறை வாக பேசி, இப்பணியினை உனக்கு தர இயலாது என மிரட்டியதால் மனமு டைந்த நாகலட்சுமி பேருந்திலி ருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அதிர்ச்சி யையும் பரபரப்பையும் ஏற்படுத்தி யுள்ளது.
நாகலட்சுமியை தற்கொலைக்கு தூண்டிய 3 பேர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். அவரது கண வருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஏப்ரல் 13 வியாழனன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர், மாவட்டத் தலை வர் ஜெ.காசி, கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் இரா. விஜயராஜன், எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ்.பாலா, புற நகர் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் த. செல்லக்கண்ணு, வி.பி. முருகன், பா.ரவி, எஸ். பி.இளங்கோ வன், வி.உமாமகேஸ்வரன், செ. முத்துராணி, பி.ஜீவானந்தம், கள்ளிக்குடி ஒன்றியச் செயலாளர் பி.ராஜேந்திரன், மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நர சிம்மன், வை.ஸ்டாலின், மாதர் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் மலர்விழி, மாவட்டச் செயலாளர் க. பிரேமலதா, மாமன்ற உறுப்பி னர்கள் என். விஜயா, வை.ஜென்னி யம்மாள் உட்பட பலர் கலந்து கொண் டனர். மறியலை தொடர்ந்து காவல்துறை தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தினர்.இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கி றோம் என்று காவல்துறை உறுதி யளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பிரேதத்தை வாங்க மறுப்பு
இறந்த நாகலட்சுமி உடல் மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. குற்றவாளிகளை கைது செய்யாமல் பிரேதத்தை வாங்க மாட்டோம் என குடும்பத்தி னர் மற்றும் போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கூறினர். கே.சாமுவேல்ராஜ் செய்தியா ளர்களிடம் கூறுகையில், நாக லெட்சுமியை தற்கொலைக்கு தூண்டிய கிளார்க் முத்து, வார்டு உறுப்பினர்கள் பாலமுருகன், வீரக் குமார் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும், 3 பேரின் பதவிகளை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
நாகலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வழக்கு பதிந்து, தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுத்திடுக!
ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, ஏப்.13- 100 நாள் வேலைத்திட்ட பணித்தளப் பொறுப் பாளர் நாகலட்சுமியை தற்கொலைக்கு தூண்டி யவர்கள் மீது வழக்கு பதிந்து, தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ். வாலண்டினா, மாநிலப் பொதுச்செய லாளர் அ. ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மதுரை மாவட்டம் திருமங்கலம் மையிட் டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி வயது (31). கணவர் பெயர் கணேசன் வயது (38). நாகலட்சுமி மிகவும் வறுமையான சூழ லில் ஐந்து பெண் குழந்தைகளை வைத்து குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தி ருக்கிறார். இந்நிலையில் மாவட்ட ஆட்சிய ரிடம் தனக்கு வேலை வேண்டும் என்ற கொடுத்த மனுவின் அடிப்படையில், கருணை அடிப்படையில் மையிட்டான்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணித்தளப் பொறுப் பாளராக பணி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களாக 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளராக பணி யாற்றி வந்த நாகலட்சுமியை வார்டு கவுன் சிலர்கள் வீரக்குமார், பாலமுருகன், கிளர்க் காக பணியாற்றும் முத்து ஆகியோர் தொடர்ந்து பணி செய்ய விடாமல் தடுத்து வந்த தாகவும், வேலையை விட்டு செல்லும்படி மிரட்டி வந்ததாகவும் தெரிகிறது.
இதுகுறித்து கள்ளக்குடி காவல் நிலை யத்தில் நாகலட்சுமி புகார் அளித்தும் உள்ளார். புகார் மீதும் எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்காத நிலையில், நாகலட்சுமி தனக்கு ஏற்பட்ட மிகக் கொடுமையான சூழலை கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக தமிழக அரசு மரணமடைந்த நாகலட்சுமிக்கு நீதி கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்ள வேண்டும். 100 நாள் வேலை பணித்தளங்களில் உள் ளூர் கவுன்சிலர்களின் தலையீடுகளை உடனடி யாக தடுத்து நிறுத்திட வேண்டும். மேலும் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இறந்த நாகலட்சுமி குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணமாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். நாகலட்சுமியின் பெண் குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும். சம்பவத்தில் சம்பந்தப் பட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் தகுந்த தண்டனை கிடைக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகலெட்சுமி மரணத்திற்கு நியாயம் கோரி, விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்கம் போராட்டத்திலும் ஈடுபட்டன.