tamilnadu

img

மயிலாடுதுறை காவல்நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்

மயிலாடுதுறை, நவ.14-  மயிலாடுதுறை அருகேயுள்ள மாப்படுகை, நாராயணபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாரதி படிப்பகத்தை அடித்து, உடைத்து, செங்கொடியை கிழித்து, கொடிக் கம்பத்தை அடி யோடு பிடுங்கி எடுத்து சென்ற சமூக விரோத கும்பல் மீது காவல் நிலை யத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காத மயிலாடு துறை காவல் துறையை கண்டித்து,  காவல் நிலையத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் முற்று கையிட்டு போராட்டம் நடத்தப் பட்டது.  மயிலாடுதுறை மாப்படுகை நாராயணபுரத்தில் அமைக்கப் பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பாரதி படிப்ப கத்தை கடந்த நவ-11 அன்று இரவு புரோக்கர் பாண்டியன், அவரது மகன் அரவிந்தன் ஆகியோர் தூண்டுதலின் பேரில், பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிற மாப்படுகை பொன்னுத்துரை தலைமையிலான கும்பல் அடித்து உடைத்ததோடு, செங்கொடியை கிழித்து நாசப் படுத்தி கொடிக்கம்பத்தையும் எடுத்துச்சென்றுவிட்டது. அது குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள் ளது. குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டிய மயிலாடுதுறை காவல் துறை அலட்சியமாகவேஉள்ளது.  இதையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் வியாழனன்று காலை கொட்டும் மழையிலும் மயிலாடு துறை காமராஜர் சாலையிலுள்ள கட்சியின் மாவட்டக்குழு அலுவல கத்திலிருந்து கண்டன முழக்க மிட்டு, மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் தலைமையில் பேரணி யாக புறப்பட்டு கச்சேரி சாலை, காந்திஜிரோடு வழியாக காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த ஏடிஎஸ்பி ஜெயக்குமார் தலைமை யிலான காவல்படையினர் போரா ட்டத்தை ஒடுக்கும் விதமாக தடுப்பு களை வைத்து தடுத்து, போராட்ட த்தில் பங்கேற்றவர்களை கடுமை யாக தாக்கினர். காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டித்து உடனடியாக கும்பகோணம்-மயி லாடுதுறை சாலையான சுந்தரம் திரையரங்கு அருகில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டவர்களை கைது செய்த காவல்துறை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரை ராஜ், ஜி.வெண்ணிலா, சி.விஜய காந்த், கே.பி.மார்க்ஸ், டி.துரைக் கண்ணு(நகரச் செயலாளர்), ஒன்றியச் செயலாளர்கள் டி.ஜி.ரவி, கே.கேசவன், வழக்கறிஞர் ஞான பிரகாசம், ராமகுரு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செய லாளர்கள், வாலிபர், மாதர் சங்க  நிர்வாகிகள், மாவட்டம் முழுவதிலு மிருந்து 400 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.  காவல்துறை அளித்த மதிய உணவை சாப்பிட மறுத்து உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அது குறித்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டது காவல்துறை. 

போராட்டம் குறித்து பேட்டி யளித்த மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், புரோக்கர் பாண்டியன் கொடுத்த பணத்திலிருந்து வாங்கித் தரும் உணவு எங்களுக்கு வேண்டாம். கட்சியின் படிப்ப கத்தை சேதப்படுத்தி, எங்கள்  உயிரினும் மேலான செங்கொடி யை சேதப்படுத்திய சமூக விரோ திகளை கைது செய்தால் தான் போராட்டத்தை கைவிட்டு வெளி யேறுவோம். அதுவரை எத்தனை நாட்களானாலும் எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.   இந்நிலையில், காவல்துறை மதிய உணவு வாங்கி தந்ததை “சமூக விரோதிகள் தரும் பணத்தில் வாங்கி தருவதை எங்களால் உண்ண முடியாது” எனக்கூறி மண்டபத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்தால் தான் மண்டபத்தை விட்டு வெளியேறு வோம் எனக்கூறி அங்கேயே சமைத்து உண்ணும் போராட்டத்தை மார்க்சி ஸ்ட் கட்சி நடத்தி வருகிறது. 

யார் இந்த புரோக்கர் பாண்டியன்? 

மயூரநாதர் கோவிலில் உச்சிக்காலக் கட்டளை, அடைக் காம கட்டளை, உச்சிக்கட்டளை ஆகிய பூஜைகள் செய்வதற்காக 1913 ஆம் ஆண்டு, 1930 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைகளுக்கு சொந்த மான 34 ஏக்கர் நிலத்தை போலி யான ஆவணங்களை தயார் செய்து அபகரித்து 350 பிளாட்டுகளை அமைத்து நடுத்தர மக்களை ஏமாற்றி விற்றவர் தான், புரோக்கர் பாண்டியன். கந்து வட்டி பைனான்ஸ் தொழிலும் செய்கிறார்.  சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி கள் எதுவுமே செய்து கொடுக்கா மல் முறைகேடாக பிளாட்டுகளை புரோக்கர் பாண்டியன் விற்றுவிட் டார். மக்களை ஏமாற்றி அறக்கட்ட ளைகளுக்கு சொந்தமான இடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி தொடர் போராட்டம் நடத்தியதன் விளை வாக நகராட்சி மூலம் அப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. அதோடு, முறைகேடுகளில் ஈடுபட்ட புரோக்கர் பாண்டியன் மீது மோசடி குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டது.  பல்வேறு  முறைகேடுகளில் ஈடுபடுவதும், கந்துவட்டிக்கு பணம் தந்து மக்களை மிரட்டி சொத்து சேர்ப்பதும் தான் இந்த  புரோக்கர் பாண்டியனின் வேலை.  அவருக்கு ஆதரவாக மயிலாடு துறை காவல்துறை செயல்படுவ தாக மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.