tamilnadu

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல்...

மதுரை:
மதுரை மாநகராட்சி  ஐந்தாவதுவார்டு வள்ளுவர் காலனி பகுதியில்வாய்க்கால் தேவைக்காக குடியிருப்பு முன்பாக குழி தோண்டப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும்மூடப்படவில்லை. குடியிருப்பு பகுதி மக்கள் அடிக்கடி குழிக்குள்விழுந்து விபத்துக்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை  மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்காதநிலையில்  அப்பகுதி மக்கள் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீனாம்பாள்புரம் பகுதிகுழுச் செயலாளர் ஏ.பாலு,  கணேசன், முத்து, எஸ். ஆர்.ஸ்ரீகுமார்,கிளைச் செயலாளர் வெங்கடேசன்தலைமையில்  மறியலில் ஈடுபட்டனர்.பின்னர் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஒருவார காலத்திற்குள் நடவடிக்கைஎடுப்பதாக உறுதி யளிக்கப்பட் டது. இதையடுத்து மறியல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.