tamilnadu

img

பெருங்காமநல்லூரில் தியாகிகள் நினைவு மண்டபம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை,பிப்.14-  பெருங்காம நல்லூரில் 1.47 கோடி ரூபாய் செலவில்  கட்டப்பட்டுள்ள தியாகிகள் நினைவு மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்தார்.  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களின் எதேச்சதிகார சட்டத்தை எதிர்த்து போராடியதால் 1920 ஆம் ஆண்டு ஆங்கி லேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரமலைக் கள்ளர் சமூகத்தை சேர்ந்த 16 தியாகிகளை சிறப்பிக்கும் வகையிலும், அந்த நிகழ் வின் நூற்றாண்டை குறிக்கும் வகையிலும் பெருங்காமநல்லூரில் தியாகிகள் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் தொடர்ந்து சட்ட மன்றத்தில் குரல் எழுப்பி யது. மேலும், துறைகளின் அமைச்சர்கள் மற்றும் முதல மைச்சர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றது. இதனையடுத்து, 2021-2022 ஆம் ஆண்டிற் கான செய்தி மக்கள் தொடர்புத்துறை மானியக் கோரிக்கையில் புதிய நினைவு மண்டபங்கள் குறித்த புதிய அறிவிப்புகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து,  ரூ.1.47 கோடி  செலவில் பெருங்காமநல்லூ ரில் தியாகிகள் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது.   இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வா யன்று(பிப்.14) சென்னை  தலைமைச் செயலகத்தி லிருந்து காணொலி காட்சி  மூலம் திறந்து வைத்தார்.

இதேபோல் சென்னை, கிண்டி, காந்தி மண்டப  வளாகத்தில்  அமைக்கப் பட்ட வீரபாண்டிய கட்ட பொம்மன், மருதுபாண்டி யர்களின் சிலைகள் மற்றும்  வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த பொலி வூட்டப்பட்ட செக்கு மற்றும் வ.உ.சி.யின் மார்பளவுச் சிலை ஆகியவற்றை முதல மைச்சர் திறந்து வைத்தார். மேலும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வி.கே.பழனிசாமி கவுண்டர், முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான பொள் ளாச்சி நா. மகாலிங்கம், சுதந்திரப்போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலை யாண்டி வெங்கிடுபதி எத்த லப்பர் நாயக்கர் ஆகியோ ருக்கு சிலைகளுடன் கூடிய  அரங்கங்கள் அமைக்கும் பணிகளுக்கு முதலமைச் சர்அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, மு.பெ. சாமிநாதன், மேயர்  ஆர். பிரியா, செய்தித் துறை செயலாளர் செல்வ ராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.