புதுதில்லி, ஜூலை 19 - அனைவருக்கும் உரித்தான இந்தியாவைப் பாதுகாக்கவே, குடியரசுத் துணைத்தலைவர் தேர்த லில், தான் போட்டியிடுவதாக எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளரான மார்கரெட் ஆல்வா கூறியுள்ளார். குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் எதிர்க்கட்சி களின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா செவ்வாய்க்கிழமையன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும், மேற்குவங்க முன்னாள் ஆளுநர் ஜகதீப் தன்கர், திங்களன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் முன்னிலையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான செவ்வாயன்று எதிர்க்கட்சித் தலை வர்கள் புடைசூழ மார்கரெட் ஆல்வா, நாடாளுமன்ற செயலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் சீத்தாராம் யெச்சூரி, சிபிஐ தேசியச் செயலாளர் து. ராஜா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடு தலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. ஆர்ஜேடி தலைவர் மனோஜ் ஜா, சமாஜ்வாதி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ், ஆர்எஸ்பி தலைவர் என்.கே. பிரேமச் சந்திரன் உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மார்கரெட் ஆல்வா, அனைவருக்குமான இந்தியாவை பாதுகாக்கவே குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவ தாக தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சியின் பொது வேட் பாளராக தான் முன்னிறுத்தப்பட்டது ஒரு பாக்கியம். எனக்கு கிடைத்த மரி யாதை. அதனால்தான் மிகுந்த பணி வுடன் எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துள்ளேன்.
என்னை வேட்பாளராகத் தேர்வு செய்தது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக, ஒன்றிய அமைச்சராக, ஆளுநராக, ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவின் பெருமைக்குரிய பிரதிநிதியாக, 50 ஆண்டுகளை நான் பொதுவாழ்வில் செலவிட்டதற்கு, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எனக்களித்த அங்கீகாரம் என்று நான் நம்புகிறேன். பல்வேறு நாடுகள் மற்றும் பிற உலகளாவிய தளங்களில், பெண் களின் உரிமைகள் மற்றும் நமது விரிந்து பரந்த இந்திய தேசம் முழு வதும் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட குழுக்கள் மற்றும் சமூ கங்களின் வழங்கப்பட்ட உரிமை யாகவும் பார்க்கிறேன். இந்த 50 ஆண்டுகளில், நான் ஒரு மைப்பாடு, தைரியம் மற்றும் அர்ப் பணிப்புடன் எனது நாட்டிற்காக உழைத் தேன், எனது ஒரே கடமை: இந்திய அரசியலமைப்பின்படி அச்சமின்றி சேவை செய்வதாகும். எனது, வேட்பு மனுவை ஆதரிக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டிருப்பதை, இந்தியா என்ற யதார்த்தத்தின் உருவக மாக பார்க்கிறேன்.
நாங்கள் இந்த பெரிய நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்து வந்துள் ளோம், வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறோம், வெவ்வேறு மதங் களையும் பழக்க வழக்கங்களையும் பின்பற்றுகிறோம். வேற்றுமையில் நமது ஒற்றுமையே நமது பலம். அந்த வகையில், வயலில் பாடுபடும் விவசாயி, கிராமத்தில் சேவையாற் றும் ஆஷா செவிலியர், சிறிய நகர கிரானா கடை உரிமையாளர், கல்லூரி மாணவர், அலுவலக ஊழியர், வேலை யில்லாத இளைஞர்கள், குடும்பத் தலைவியர், தொழிற்சாலையில் வேலை செய்பவர், பத்திரிகையாளர், அரசு அதிகாரி, எல்லையில் உள்ள ஜவான், தொழில்முனைவோர் உள்ளி ட்ட அனைவருக்கும் உரித்தான இந்தி யாவுக்கான போராட்டத்தையே நாங்கள் (எதிர்க்கட்சிகள்) நடத்துகிறோம். இவ்வாறு மார்கரெட் ஆல்வா கூறியுள்ளார்.