tamilnadu

img

மரக்காணம் கள்ளச் சாராய சாவு எண்ணிக்கை 5ஆக அதிகரிப்பு

விழுப்புரம், மே 14- மரக்காணம் கள்ளச்சாரய சாவு  எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ளது எக்கி யார்குப்பம். இந்த கிராமத்திலுள்ள வம்பாமேடு பகுதியைச் சேர்ந்த  30-க்கும் மேற்பட்டோர் அங்கு விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராய பாக்கெட்டுகளை வாங்கி குடித்துள்ளனர். இவர்களில் 6 பேர் மயங்கி விழுந்தனர். உடனடியாக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கும், தனி யார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றுள்ளனர். இதில்,  சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (மே 13) மூன்று பேர் பலியானார்கள். மேலும். 29 பேர் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ராஜமூர்த்தி என்பவர் ஞாயிற்றுக்கிழ மை (மே 14) சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த தகவல் அறிந்த விழுப்புரம் ஆட்சியர் சி. பழனி,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களிடம் உடல்நலம் விசாரித்தனர்.

மேலும், மாவட்டம் முழுவதுமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு எக்கியார்குப்பம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஞாயிறன்று (மே 14) டி.ஐ.ஜி. பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் எக்கியார்குப்பம் கிராமத்திற்கு சென்றனர். அப்போது, மரக்காணம் மற்றும் சுற்று வட்டார  பகுதியில் கள்ளச்சாராய விற்பனை யில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டனர். இதற்கிடையே, அமைச்சர்கள் க. பொன்முடி, செஞ்சி ஆர். மஸ்தான் ஆகியோர் சம்பவம் நடந்த எக்கியார் குப்பத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த னர். அதனைத் தொடர்ந்து, முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 28 நபர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.  மாவட்ட ஆட்சியர் பழனி, சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, லட்சு மணன், ஐ.ஜி.கண்ணன், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் உடனிருந்தனர்.