tamilnadu

img

மாங்காய் விலை வீழ்ச்சி; விவசாயிகள் பாதிப்பு ஜூன் 10 விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மாங்காய் விலை வீழ்ச்சி; விவசாயிகள் பாதிப்பு ஜூன் 10 விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 3 - மாங்காய் விலை வீழ்ச்சியால், விவசாயி கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே முத்த ரப்பு கூட்டம் நடத்தி அரசு விலை நிர்ணயம்  செய்திடவும், விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஜுன்  10 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி,  திருப்பத்தூர், வேலூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மா விவசாயம் செய்யப்படு கிறது. கடந்த சில ஆண்டுகளாக விளைச்சல்  பாதிப்பிருந்த சூழலில், இந்த ஆண்டு கூடுத லாக விளைந்து தற்போது அறுவடை நடைபெறும் சூழலில் மாங்காய்க்கு கட்டுப் படியான விலை கிடைக்கவில்லை. மாங்காய் கொள்முதல் செய்யும் வியாபாரி கள் சிண்டிகேட் அமைத்து கொள்முதல் விலையை குறைத்துள்ளனர். ஒரு கிலோ மாம்பழத்தை நான்கு ரூபாய்க்குகூட வியா பாரிகள் கொள்முதல் செய்வதில்லை.  எனவே, முத்தரப்பு கூட்டம் நடத்தி மாங் காய்க்கு கட்டுபடியாகிற விலையை நிர்ண யம் செய்திட வேண்டும். விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு  வழங்க வேண்டும். கூழ் தொழிற்சாலைகள், குளிர்பதன கிடங்குகள் உள்ளிட்ட கட்டுமா னங்களை உருவாக்கி மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மா  சாகுபடி நடைபெற்றுள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், தேனி, வேலூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 10.6.2025 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.