தமிழகம் முழுவதும் மா விவசாயிகள் போராட்டம்
விலை வீழ்ச்சியால் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு
கிருஷ்ணகிரி, ஜூன் 10 - கடந்த ஆண்டை விட அதிகமான மற்றும் திரட்சியான மாங்காய் விளைச் சல் இருந்தும், போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனர். மாங்கனி நகரம் தமிழகத்தில் மா விளைச்சலில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் இடத் தில் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மா விவசாயம் நடை பெற்று வருகிறது. இதனால், மாங்கனி நகரம் என்றும் கிருஷ்ணகிரி அழைக் கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி 31 முறை நடைபெற்றுள்ளது. விலை வீழ்ச்சியின் தாக்கம் மாங்காய் பருவத்தின் தொடக்கத் தில் விற்பனை மிகவும் மந்தமாகவும் குறைந்த விலைக்கும் விற்கப்பட்டு வந் தது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி யர் தலைமையில் நடைபெற்ற முத்த ரப்பு பேச்சுவார்த்தையில் மா விவசாயி கள், வியாபாரிகள், மாங்கூழ் தொழிற் சாலையினர் மற்றும் அரசு அலுவலர் கள் பங்கேற்றனர். இதில் குறைந்தபட் சம் கிலோ 12 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. ஒப்பந்த மீறல் ஆனால், தற்போது தொழிற்சாலை உரிமையாளர்கள் விவசாயிகளிடம் கிலோ 3, 5, 6 ரூபாய் என அடிமாட்டு விலைக்கே மாங்காய்களை கொள் முதல் செய்து வருகின்றனர். கட்டுபடி யாகாமல் அறுப்பு கூலிக்கு கூட வழி இல்லாததால் பெரும் நஷ்டம் அடை யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒப்புக் கொள்ளாத பல விவசாயிகள் மாங்காயை அறுவடை செய்யாமல் மரத்திலேயே விட்டுள்ளனர். கடந்த ஆண்டு தோதாபுரி மாங் மாய் ரகம் டன் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரைக்கும் தரத்திற்கு ஏற்றவாறு விற்பனையா னது. தற்பொழுது ஒரு டன் 4 ஆயி ரத்திற்கும் குறைவாகவே விலைபோகி றது. இந்நிலையில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் போச்சம் பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டச் செயலாளர் கடவுள் வேந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழக அரசு முத்தரப்பு கூட்டத்தை நடத்தி கட்டுப்படியான கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மா விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஆய்வுசெய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தமி ழக அரசு கூடுதலாக மாங்கூழ் தொழிற் சாலைகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலா ளர் சாமி. நடராஜன், மாவட்டச் செய லாளர் பிரகாஷ், தலைவர் முருகேஷ், பொருளாளர் எம்.எம். ராஜு ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாவட்டத் தலைவர்கள் சபா பதி, கோவிந்தசாமி, பெரியசாமி, ஸ்ரீனி வாசன், கே.சி. இராமசாமி, எஸ்.பி. சின்னச்சாமி, முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன.