மானாமதுரை, ஏப்.25- சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 25 அன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திர ளானோர் பங்கேற்றனர். சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடை பெறும். கோவில் முன்பாக வைகை ஆற்றில் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். கொடியேற்ற விழா வில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, நகர்மன்ற துணைத்தலைவர் பாலசுந்தரம், திமுக ஒன்றிய செயலாளர் ராஜாமணி, கீழமேல்குடி நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் வெள்ளமுத்து, மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.முக்கிய நிகழ்ச்சிளான திருக்கல்யா ணம் மே 2 ஆம் தேதியும், தேரோட்டம் மே.3 ஆம் தேதியும், வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா மே 5 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.