மதுரை, மே 13- மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சாலக்கிப்பட்டி பெரிய கண்மாயில் 30 வயது மதிக் கத்தக்க ஆண் இறந்துக் கிடப்பதாக மேலூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இறந்துக் கிடந்த வரின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இறந்தவர் உடல் கிடந்த கண்மாய் பகுதியில் 50க்கும் மேற்பட்ட வாத்துகளும் இறந்துக் கிடந்ததையடுத்து. காவல்துறையினர் இறந்தவர் யார்? வாத்துக்கள் எப்படி இறந்தது? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.