tamilnadu

img

மதவெறி எதிர்ப்பு தினம்!

சேலம், ஜன.30- மகாத்மா காந்தியின் நினைவு தினம்  சேலம் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு மக்கள் ஒற்றுமை  மேடையின் சார்பில் நடைபெற்றது. முன் னதாக, தேசப்பிதா மகாத்மா காந்தியை  கொலை செய்தவரை மீண்டும் தூக்கி லிடுவோம் என்கிற முழக்கத்தோடு, கோட் சேவை தூக்கில் இட முயற்சித்தபோது போலீசாருக்கும், அமைப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற  கோட்சேவை மறுபடியும் தூக்கிலிடு வோம் என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் கோட் சேவை தூக்கிலிடும் நிகழ்வு நடைபெற் றது. மத நல்லிணக்கத்திற்காகவும், இந்து, முஸ்லீம் ஒற்றுமைக்காகவும் பாடுபட்ட தேசப்பிதா மகாத்மா காந்தி அவரின் கொள்கைப்படி நடப்போம், நாட்டின் சுதந்திரத்தையும், குடியரசு அரசியல் சாசனத்தையும் காத்து நிற்போம். அடிப் படை உரிமையிலான பேச்சுரிமை, எழுத் துரிமை, ஊடக உரிமைக்கு வரும் ஆபத்தை தடுத்து நிறுத்துவோம் என உறுதிமொழி  ஏற்றனர். முன்னதாக சிபிஎம் வடக்கு மாநகர செயலாளர் என்.பிர வீன்குமார் தலைமையில், கோட்சே உருவ பொம்மையை தூக்கிலிட முயற் சித்தனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் கோட்சேவின் உருவ பொம் மையை பிடுங்க முயற்சி செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  இந்நிகழ்வில், தமிழ்நாடு மக்கள் ஒற் றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் எம்.  சேதுமாதவன், சிபிஎம் மாவட்ட செயலா ளர் மேவை.சண்முகராஜா, மக்கள் ஒற் றுமை மேடை நிர்வாகிகள் ஆர். குழந் தைவேல், கே.ராஜாத்தி, எம்.பெரியண் ணன் டி.பரமேஸ்வரி உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.

கோவை

கோவை மக்கள் ஒற்றுமை மேடை  அமைப்பின் சார்பில் மகாத்மா காந்தி 75  ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக் கப்பட்டது. அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் வழக்கறிஞர் கோபால் சங்கர் நிகழ் விற்கு தலைமை தாங்கினார். கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணி வித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது.  இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், கோவை மாவட்ட செய லாளர் சி.பத்மநாபன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலை வர் யு.கே.சிவஞானம்,  திராவிட தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி,  மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை மாமன்ற உறுப்பினர்கள் பூபதி, கண்ணகி ஜோதி பாசு,  புரட்சிகர இளைஞர் முன்னணி மல ரவன், திராவிடர் விடுதலைக் கழகம் நேருதாஸ், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் தினேஷ் ராஜா,  இந்திய மாண வர் சங்கம் அசாருதீன், வங்கி ஊழியர் கள் சங்கம் மகேஷ்வரன் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். முன்னதாக, மகாத்மா காந்திக்கு மாலை அணிவித்த பின் மதவெறிக்கு எதிராகவும், மக்கள்  ஒற்றுமை பாதுகாப்போம் என்கிற உறுதி மொழி ஏற்கப்பட்டது.  

தருமபுரி

மகாத்மா காந்தி நினைவு தினத்தை யொட்டி சமூக நல்லிணக்க மேடை சார் பில் தருமபுரி, அரூர், பாப்பிரெட்டிப் பட்டி ஆகிய இடங்களில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மதவாத உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற் றது. தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச் சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் பொ.மு.நந்தன் தலைமை தாங்கினார். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிசு பாலன், எம்எம்கே மாவட்டத் தலைவர் சுபேதார், மாதர் சங்கத்தின் நிர்மலா ராணி,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிராஜுதீன் மற்றும் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதேபோன்று, பல்வேறு பகுதியில் மதவாத உறுதி மொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் அ.குமார்,  விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தொகுதி துணை செய லாளர் கேசவன், தமுமுக சார்பில் நியாஸ், அருட்தந்தை ஜேம்ஸ் ஆண் டனி, சிபிஐ  நகர செயலாளர் பா.முரு கன் சமூக நல்லிணக்க மேடை ஒருங் கிணைப்பாளர் அம்புரோஸ், மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் வட்ட செயலா ளர் தனுஷன், மாவட்டக்குழு உறுப்பி னர் உறுப்பினர் சி.வஞ்சி,  டி.சேகர், தீர்த்தகிரி, காங்கிரஸ் கட்சியின் டி.மாணிக் கம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர்.