உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தினை தமிக அரசு புனரமைப்பு செய்துள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பாரதியார் மார்பளவு சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார். வாரணாசியில் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் செய்தித்துறை செயலர் இரா.செல்வராஜ், பாரதியார் குடும்பத்தினர் உள்ளனர்.