மதுரை, மே 31- கொரோனா ஊரடங்கால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவ தன்னுடைய மகளின் எதிர்காலத்திற்காக சேர்த்து வைத்த சேமிப்பு நிதி ரூ. 5 லட்சத்தை வழங்கிய முடிதிருத்தும் தொழிலாளி. மதுரை மேலமடை பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கூலித் தொழிலா ளர்கள் வசித்து வருகின்றனர். ஊராடங்க ளில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக அவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு மேல மடை பகுதியில் முடி திருத்தும் கடை வைத்துள்ள மோகன் என்பவர் உதவி செய்துள்ளார். அவர் தனது ஒன்பதாம் வகுப்பு (அண்ணாநக ரில் உள்ள புஸ்கோஸ் பள்ளி) படிக்கும் மகள் நேத்ராவின் எதிர்காலக் கல்வி, திருமணத்திற்காக சேர்த்து வைத்தி ருந்த ரூ.5 லட்சம் ரூபாயின் மூலம் நிவா ரணப் பொருட்கள் வாங்கி அப்பகுதி ஏழை மக்களுக்கு வழங்கியுள்ளார். மோக னின் முயற்சியை பிரதமர் மோடி ஞாயி றன்று நிகழ்த்திய மன்கி பாத் உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து பல் வேறு தரப்பினரும் மோகனை பாராட்டினர். இது குறித்து மோகன் மகள் நேத்ரா கூறுகையில், “ எங்கள் குடும்பம் இதே போன்று பசியை சந்தித்துள்ளது. எனவே பசிப்போருக்கு உதவ என்னு டைய கல்வி சேமிப்பு செலவு செய்ய பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத் தேன். எனது தந்தை வேண்டுகோளை நிறைவேற்றியுள்ளார். எனது தந்தையை மோடி பாராட்டியுள்ளது மகிழ்ச்சியளிக்கி றது என்றார். இதுபோன்ற உதாரணங்கள் மதுரை யில் ஏற்கனவே சில உள்ளன. மதுரை சமயநல்லூரைச் சேர்ந்த வீரக்குமார் என்பவருக்கு சமயநல்லூரில் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதையொட்டி புதுமணத்தம்பதிகள் ஏழை-எளிய மக்கள் சுமார் 300 பேருக்கு இலவசமாக உணவளித்தனர். மதுரையில் மாமதுரை அன்ன வாசல் திட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு.வெங்கேடசன் முயற்சியால் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
குறைந்தது நாளொன்றுக்கு 6,000 பேர் பசியை அன்னவாசல் போக்கிவருகிறது. இந்தத் திட்டத்திற்கு நடிகர் சூர்யா ரூ.5 லட்சம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளனர். இந்த இடத்தில் குறிப்பிட வேண்டிய விஷயம், “கொரோனா காலத்தில் தமி ழக அரசு பணம் என்ற அடிப்படையில் ரூ.1000 மட்டுமே இலவசமாக வழங்கி யுள்ளது. அதை பெரும்பாலான மக்கள் மின்சார பில் கட்டுவதற்கும், கேபிள் டிவி கட்டணம் செலுத்துவதற்கு மட்டுமே பயன்பட்டது. மீதமிருந்த தொகை இரண்டு நாட்களுக்கு மட்டுமே கை கொடுத்தது. ஊரடங்கோ ஐந்தாம் கட்டத்திற்கு வந்துவிட்டது. ஆயிரம் ரூபாய் எப்படி போதுமானதாக இருக்கும். அதையும் கொடுப்பது போல் கொடுத்து வாங்குவது போல் வாங்கிக் கொண்டது அரசு என்ற புலம்பல் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
ரேசனில் வழங்கிய அரிசியும் தரமற்றது என மக்கள் குற்றம்சாட்டினர். லாக்டவுன் காலத்தில் அந்த தரமற்ற அரிசியையும் அன்றாடங் காய்ச்சிகள் வீடுகளில் காய்ச்சிக் குடித்தது கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது. அரசுகள் உதவி செய்தாலும், மாமதுரை அன்னவாசல் திட்டம், முடி திருத்தும் தொழிலாளி மோகன், சமய நல்லூர் வீரக்குமார் போன்றவர்களின் முயற்சிகளும் மதுரை உழைப்பாளி மக்களின் பசியை குறைந்தது ஒரு நேரமாவது போக்கியுள்ளது என்றால் அது மிகையல்ல.