அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளத்தை உள்ளடக்கிய மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை முழுமையாக ரத்து செய்திருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, மேலூர் பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர். அப்போது மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய் மற்றும் எஸ்.பாலா ஆகியோர் உடனிருந்தனர்.